பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

10 வை. சு. சண்முகம்

முத்தமிழ்க்காவலர் பெ.கி.ஆ. விசுவநாதம்

(சண்முகனாரும் முத்தமிழ்க்காவலர் அவர்களும் ஒரே இயக்கத்தி லிருந்து நெடுநாள் பழகிய வர்கள். தொண்ணூறாம் அகவையில் வாழும் இவ்விளைஞர் ஒரே காலத்தில் வாழ்ந்து, பழகிக் கண்டறிந்த உண்மைகளைக் கட்டுரையாக - வழக்கம் போற் சுருக்கமாக ஆனால் விளக்க மாகத் தந்துள்ளார்.)

நாட்டுக் கோட்டை நகரத்தார் சமூகம் தமிழகத்தில் சிறந்து உயர்ந்து விளங்கும் ஒரு செல்வச் சமூகம், வருந்தி உழைப்பதும், சிக்கனமாக வாழ்வதும், சேமித்த பொருள்களை அறச்செயல் களுக்கு வாரி வழங்குவதும் அவர்களின் கொள்கைகள். இச்சமூகம் இல்லாவிடில் பல திருக்கோயில்கள் சீர்குலைந்து போயிருக்கும். இன்றும் கூட பற்பல திருக்கோயில்களில் திருப்பணிகளும் குட முழுக்கு களும் இச்சமூகத்தினரால் நடை பெற்று வருவதைக் காணலாம்.

சமயத்தொண்டு மட்டுமல்ல கல்வித் தொண்டிலும் இச்சமூகத்தினர் தலை சிறந்து விளங்குகின்றனர். ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் அவர்