பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

190 சீர்திருத்தச் செம்மல்


தனி மனிதரைப் பற்றிப் பாடுவதில்லை என்ற முடிவுக்கு வந்த வரகவி பாரதியார் அதை மாற்றிக் கொண்டு "செட்டி மக்கள் குல விளக்கு" என்று தந்தையார் பெயரில் கவிதை எழுதினார்களாம். பிற்காலத்தில் பல இளைய தலைமுறை யினர் தந்தையாரவர்களிடம் வந்து மகாத்மா காந்தியடிகளின் கடிதங்கள், பாரதியாரின் கடிதங்கள், கவிதைகள் முதலியவற்றை வெளியிடக் கருதிக் கேட்டவர்கள் பலர், இன்னும் திரு. சோம. லெ. போன்றவர்கள் கானாடுகாத்தானுக்கு வந்து, அன்றைய செட்டி நாடு இருந்த நிலையில் சமூகத்துக்கும், காங்கிரஸ், சுயமரியாதை இயக்கங்களுக்கும் நீங்கள் ஆற்றிய சேவை விவரங்களையும் தாருங்கள் கூறுங்கள் என்று எவ்வளவோ கேட்டும் பெறமுடியாது வருத்தத்துடன் சென்றுள்ளனர். நானே ஒரு முறை கேட்டுப் பார்த்தேன். அதற்கு அவர்கள் கூறிய பதில் "இந்தக் கடிதங்கள், கவிதைகள் எல்லாம் அந்தக் காலத்தில் நானிருந்த நிலையை வைத்து எழுதியவை. இப்பொழுதுள்ள நிலையில் வெளியிட விரும்பவில்லை. நல்ல காலம் நிச்சயம் வரும். அப்பொழுது வெளியிடலாம்." என்று கூறிவிட்டார்கள். கடைசியாக எப்படியோ தந்தையாரவர் கட்குத் தெரியாது எனது சிற்றன்னையார் உதவியுடன் கவிஅரசர் முடியரசனார் அவர்கள் அப்பாடலை எடுத்து அவர்கள் வெளியிட்ட "எழில்" பத்திரிகையில் இதனை வெளிவரச் செய்து விட்டார்.

ஒரு பொங்கல் நாளன்று வழக்கில் ஒரு கோர்ட் தீர்ப்பு வந்தது. அதில் பாதி இவர்களுக்கு அனுகூலமாகவும், பாதி எதிர்த் தரப்புக்கு அனுகூலமாகவும், விரும்பினால் அப்பீல் செய்யலாம் என்று ஜட்ஜ்மென்ட் ஆகி இருப்பதாக வக்கீலிட மிருந்து கடிதம் வந்துள்ளது. மறுநாளோ, அதற்கு மறுநாளோ நான் காரைக்குடியி