பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

194 சீர்திருத்தச் செம்மல்

பொழுது போக்காக அங்கு அன்பர்கள் சிலர் சீட்டாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது பக்கத்திலிருந்து, அவர்களில் ஒருவருக்கு அன்பர் சொ. முரு. ஆட்டம் சொல்லிக் கொண்டிருந் தார்கள்.

யாசகம் பெற அங்கு வந்த புலவர் ஒருவரிடம் இரண்டு மூன்று அன்பர்கள் பேசிக் கொண்டிருந்தோம். அதில் சொ. முரு. வந்து கலந்து பேசியபோது அவர்கட்குத் தமிழ்ப் புலமை இருப்பது தெரிந்தது. அவர்கள் பேசிய துடுக்கான, கவர்ச்சிகர மான பேச்சு என் உள்ளத்தைக் கவர்ந்தது. அவர்கள் சென்ற பிறகு விசாரித்ததில் அவர் பெயர் எஸ். முருகப்பன் என்று சொன்னார்கள்.

தேவகோட்டையில் அப்போது நடந்த 'வைசிய மித்திரன்' வாரப் பத்திரிகையில் எஸ். முருகப்பன் என்பவர் சில மாதங் கட்கு முன் எழுதிய கட்டுரை ஒன்று பார்த்தது நினைவுக்கு வந்தது.

"தேவை! தேவை!! மந்திரவாதிகள் தேவை!!! அறியாமை என்ற பேய் தனவணிகப் பெண்களைப் பிடித்திருப்பதால் அவர்களும் பேயாகி விட்டனர். அந்த இரு பேய்களும் தனவணிக ஆண் மக்களைப் பிடித்தாட்டி வைக்கிறது. அவைகளை விரட்டத்தக்க மந்திரவாதிகள் தேவை!" என்பது தான் அக்கட்டுரையின் சுருக்கம்.

அந்தக் கட்டுரை எழுதியவர்தான் எஸ். முருகப்பன் என்பவர் என்று தெரிந்தது. அவர்களைப் பார்க்க வேண்டு மென்று நண்பர் அ. ராம. ராம. அவர்களிடம் கூறியதும் ஆள் அனுப்பினார்கள். நண்பர் சொ. முரு. பத்தே நிமிடங்களில் அங்கு வந்தார்கள்.