பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 195

"எதற்காக என்னைப் பார்க்க விரும்பினர்கள்' என்றார்கள். "மந்திரவாதிகள் தேவை! அவசரத் தேவை! என்று விளம்பரம் செய்தீர்களே அத்தகை யோரிடமிருந்து மனுக்கள் ஏதும் வந்ததா?’ என்றதும் ' வரவில்லை. அடுத்த மகாமகத்துக்குள் வராது என்பதும் எனக்குத் தெரியும்' என்றார்கள். 'வரவே மாட்டார்கள் என்பதனாலேயே அவசரத் தேவை என்று அழைப்பு விட்டீர்களோ? அப்படியானால் அத்தகை யோர் முன் வந்தாலும் அவர்களுடன் ஒத்துழைக்கவும் நீங்கள் தயாரில்லையோ?" என்ற வினாவுக்கு, 'யார் சமூகத் தொண்டு செய்ய முன் வரப் போகிறார்கள்? மகிபாலன் பட்டி மு. சின்னையா செட்டியாரும், வைசிய மித்திரன் இராமனாதன் செட்டியாரும் ஏழு எட்டு ஆண்டுகளாக எழுதி முயற்சிக்கிறார்கள் யாரும் முன் வரக் காணோமே!’ என்றார்கள். 'பத்திரிகையில் எழுதிவிட்டால் போதுமா? அவ்விருவரும் வெகு தொலையில் இருக்கிறார்கள். நம் சமூகத் தொண்டு புரிய நம் பகுதிக்கு நடுநாயகமாக விளங்குகின்ற காரைக்குடி யில் ஒர் சங்கம் நிறுவலாகாதா? தமிழ் மொழி வளர்ச்சி கருதி மேலைச் சிவபுரியில் சன்மார்க்க சங்கம், அன்பர் மு. கதி. அவர்கள் முயற்சியால் ஏழெட்டு ஆண்டுகளாகத் தோன்றி வேலை செய்கிற மாதிரி தொண்டு புரியலாம்' என்றதற்கு மேலைச் சிவபுரியில் வ. பழ. சா. குடும்பத் தார் பொறுப்பேற்றிருக்கிறார்கள். இ ங் கு штfr பொறுப்பேற்பது? என்றார்கள். "நீங்கள் இருக்கிறீர்கள், அன்பர் அ. ராம. ராம. இருக்கிறார்கள். இங்குள்ள மற்றவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம்' என்றேன். அது முதல் அடிக்கடி காரைக்குடியிலும் கானாடு காத்தானிலும் அன்பர்கள் சொ. முரு., அ. ராம. ராம. இருவர்களுடன் சந்திப்பு ஏற்பட்டது.