பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

2 மறுமணம்

கானாடுகாத்தானில், அரண்மனை போன்ற ஒரு பெரிய வள மனைக்கு உரியவராக, அரசவாழ்வு வாழ்ந்து கொண்டிருந் தார் சண்முகனார்.

அம்மாளிகைக்கு 'இன்ப மாளிகை' என்று பெயர். பெயருக் கேற்ப இன்பந்தரும் மாளிகையாக மட்டுமின்றி, அன்பு தவழும் மாளிகையாகவும் அது நிலை பெற்றிருந்தது.

அதன் நடுவே நீண்டு, உயர்ந்த பெரிய கூடமொன்று உண்டு. அக்கூடத்தின் சுவரில் எதிர் எதிராக மிகப்பெரிய நிலைக்கண்ணாடி பொருத்தப்பட்டிருக்கும்.

அக்கண்ணாடிக் கெதிரில் விரிந்து நீண்ட, பெரிய ஊஞ்ச லொன்று தொங்கும். கூடத்தின் மேற்பரப்பு, அருமையான வருண வேலைப்பாடுகளால் ஒப்பனை செய்யப்பட்டிருக்கும்.

வழுவழுப்பும் பளபளப்பும் நிறைந்த பத்திகள், பளிங்குக் கற்களா லான தரைகள், ஒளி விடும் கருங்கற்றூண்கள் அம்மாளிகையின் எழிலை மிகுதியாக்கிக் காட்டும், சுருங்கக் கூறின், அஃது ஒரு கொலு மண்டபம் போலக் காட்சி நல்கும். இதற்குக் கலியாண மண்டபம்