பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

வை. சு. சண்முகனார் 61


வருவோர்க்கெல்லாம் விருந்து

காந்தியடிகள் இவ்வில்லத்தில் தங்கியிருந்த பொழுது, அவருடன் வந்த பெருமக்களுக்கும் அண்ணலைக் காண வந்த தொண்டர் களுக்கும் நூற்றுக்கணக்கானோர்க்கும் இங்கே தான் விருந்து!

பெரியார் வருங்கால் அவர்தம் படை மறவர்க்கும் தொண்டர் களுக்கும் இங்கேதான் விருந்து!

பாரதியார் வந்தார். அவரைக் காண நாமக்கல் கவிஞர் வந்தார். பாரதி அன்பர்கள் வந்தனர். அனைவர்க்கும் இங்கே தான் விருந்து!

"அவர் (பாரதியார்) தங்கியிருந்த ஜாகைக்குப் போனோம். அங்கே பாரதியாரைப் பார்க்கப் பல பேர் வந்திருந்தார்கள். அத்தனை பேருக்கும் அங்கே விருந்து நடந்தது." என்று நாமக்கல் கவிஞர் 'என் கதை' என்னும் நூலிற் குறிப்பிடுகின்றார்.

பாரதிதாசன் வருவார். தோழர் சிலரும் உடன் வருவர். பல நாள் தங்குவர். இங்கேதான் விருந்து.