பக்கம்:சீர்திருத்தச் செம்மல் வை. சு. சண்முகனார்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 சீர்திருத்தச் செம்மல் வருமாறு அழைத்தார். வருவோம்’ என்று மறுமொழி கூறினார். சண்முகனார், கானாடுகாத்தானுக்கு வந்த பின்ன ரும், வருக வருகவெனப் பல மடல்கள் பாரதியாருக்கு எழுதினார். பாரதியார் வருகை அதனை யேற்றுக் கொண்ட பாரதியார், 28-10-1919 ஆம் ஆண்டு காலை 10, 30 மணிக்குக் காரைக்குடிப் பேருந்து நிலையத்தில் வந்திறங்கினார். அங்கே அவரை அன்புடன் வரவேற்று மகிழ்ந்த இளைஞர்களுடன் அளவளாவிக் களித் துப் பகல் உணவுக்குப்பின் மாலையில் கானாடுகாத்தானுக்கு வந்து சேர்ந்தார். சண்முகனார் அகமும் முகமும் மலர வரவேற்று, அவர்க்கு வேண்டிய அனைத்து வசதிகளும் செய்து தந்து பேணி வந்தார். வறுமையில் உழன்று கொண்டிருந்த பாரதியின் நிலை மைக்கிரங்கிய சண்முகனார், குடும்பத்துடன் பாரதியைத் தம் இல்லத்திலேயே வைத்துப் புரக்க எண்ணி, இங்கேயே வந்து விடுங்கள் ஒரு குறையு. மின்றிக் கவனித்துக் கொள்கிறேன்! என்று கூறினார். வேண்டியவை அனைத்தும் செய்து தருகிறேன். இந்த அறையை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்; நான் இந்த அறையை வைத்துக் கொள்ளுகிறேன். உங்களுக்கு இந்த அலமாரி, எனக்கு இந்த அலமாரி. இந்த மேசை உங்களுக்கு; இது எனக்கு என்று பாகப்பிரிவினை செய்வது போல் பங்கு போட்டுக் காட்டி வேண்டினார். தக்க புரவலர் கிடைத்தார் எனக் கருதிய பாரதியாரும் தங்குவதென முடிவு செய்து, கடையத்தி