பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 153

53. கொண்டு அரண்மனைக்குக் கட்டுக்குத்தகையாக ளு 1க்கு கலிப்பணம் 50
54. பொறுப்பு பணம் கொடுத்து சறுவமானியமாகக் கையாடிக்
55. கொண்டு தரும பரிபாலனம் பண்ணிக் கொண்டி
56. ருப்பார்களாகவும் யிந்த தருமத்தை யாதாமொருவன்
57. வர் பரிபாலனம் பண்ணின பேர்காசியிலேயும்
58. சேதுவிலேயும் ஆயிரம் சிவலிங்கப் பிரதிட்டை
59. யும் ஆயிரம் பிரம்ம பிரதிட்டையும் ஆயிரம் கன்னிகா தா
60. னம் கோதான புண்ணியமு பெறுவார்களாக
61. வும் யிந்த தருமத்துக்கு அயிதம் பண்ணின பேர்
62. காசியிலேயும் சேதுவிலேயும் ஆயிரம் காரான் பசு
63. மாதா குருயிவர்களை வதை பண்ணின தோசத்தி
64. லே போவாங்களாகவும்.

9. ஆச்சாங்குடி செப்பேடு

கி.பி.1742ல் மன்னர் முத்து வடுகநாதப் பெரிய உடையாத் தேவரவர்கள் பெயரால் பொறிக்கப்பட்டுள்ள இந்தப் பட்டயமும் அரசுநிலையிட்ட சசிவர்ணப் பெரிய உடையாத் தேவர் அவர்களால் வழங்கப்பட்டு இருத்தல் வேண்டும். ஏனெனில் சிவகங்கைச் சீமை தன்னரசின் முதல் மன்னரான இவர் கி.பி.1728 முதல் கி.பி.1749 வரை அரசு கட்டிலில் அமர்ந்து ஆட்சி செய்துள்ளார்.

இந்தப் பட்டயம், இராமேசுவரம் திருக்கோயில் இராமநாத சுவாமிக்கு நித்ய பூஜை செய்யும் பணியில் இருந்த பிரபாகர குருக்கள் என்பவருக்கு சிவகங்கைச் சீமையில் உள்ள ஆச்சாங்குடி என்ற கிராமத்தை தானசாசனம் பண்ணிக் கொடுத்ததாக தெரிவிக்கும் ஆவணம் இது.

1. உ ஸ்ரீமூன் மகா மண்டலேசுரன் அரியிர தள விபாட
2. ன் பாசைக்குத் தப்புவராயிர கண்டன் கண்டனாடு கொண்டு கொ
3. ண்டனாடு கொடாதான் பாண்டி மண்டலத் தாபனாசாரியன் சோ
4. ழ மண்டலப் பிறத்திட்டனாசாரியன் தொண்ட மண்டலச்ச
5. ண்டப் பிறசண்டன் பூறுவ தெக்ஷண பச்சிம உத்திர சமுத்தி
6. ர ஈளமுங் கொங்கும் யாள்ப்பாணம் எம்மண்டலமு
7. மளித்துக் கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராச க்ஷ
8. ன் இராசபரமேசுரன் இராசமாத்தாண்டன் இராசகெம்
9. பிரனான சொரிமுத்து வன்னியன் வன்னியராட்டந் தவந்தா
10. ன் பஞ்ச வற்னன் ராவுத்தர் கண்டன் விருது அந்தம்பிற கண்ட
11. ன் சாடிக்காறர் கண்டன் சாமித்துரோகியன் மிண்டன் துரகரே
12. வந்தன் துங்க ராவுத்தன் தேவை நகராதிபன் சேது மூலார
13. ட்சா துரந்தரன் இராமனாத சுவாமி காரிய துரந்தரன் சிவபூ
14. சை குருபூசை மறவாத வங்கி மேற்படி நராதிபதி அடைக்கலங் காத்த