பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 307

1780 நவாப்பின் ஆக்கிரமிப்பில் இருந்து சிவகெங்கையை ராணி வேலு நாச்சியார் மீட்டு மீண்டும் தன்னரசு ஆட்சியை ஏற்படுத்தியது. நவாப்பும் கும்பெனியாரும் புதிய சிவகெங்கை அரசை அங்கீகரித்தது.
1783 நவாப்பிற்கு பேஷ்குஷ் தொகையை வசூலிக்க கும்பெனிபடை தளபதி புல்லர்டன் தலைமையில் சிவகெங்கை வருதல் (4.8.1783).
1785. ஐதர் அலியின் படையெடுப்பினால் தான்யக் களஞ்சியமான தஞ்சாவூர் சீமை சீரழிந்ததால் சிவகெங்கைச் சீமையில் இருந்து 12,000 கலம் அரிசி 1000 பொதி வண்டிகளில் தஞ்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
1789. சின்ன மருது சேர்வைக்காரது சிவகெங்கைக் கோட்டை முற்றுகையை கும்பெனியாரது தளபதி ஸ்டுவர்டு முறியடித்து திண்டுக்கல் சீமைக்குள் பின் வாங்கும்படி முறியடித்தது.
ஆற்காடு நவாப்பும் கும்பெனி கவர்னரும் மருது சேர்வைக்காரர்களுடன் சமரசம் செய்து ராணி வேலுநாச்சியாரை பதவி விலகச் செய்தது. சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத்தேவர் சிவகெங்கை மன்னர் ஆதல்.
1790. திருப்புவனம் கோட்டையை சிவகெங்கை அரசுக்கு ஆற்காடு நவாப் திருப்பி அளித்தல்.
1792. ராணி வெள்ளச்சி நாச்சியார் மரணம்.
1763. மதுரை ஆளுநர் கம்மந்தான் கான்சாகிபு திருப்புவனம் கோட்டையை தாக்கி சேதப்படுத்தியது.
1794. சிவகெங்கை சீமை முழுவதும் வறட்சியில் சிக்கியது. சிவகெங்கை இராமநாதபுரம் சீமைகளது எல்லைகளில் சிறுசிறு தகராறுகள். விசவனூர் ஆனந்தார் ஆகிய ஊர்களில் இரு சீமைப்படைகளும் மோதியது.
1796. ராணி வேலு நாச்சியார் மரணம்.
1799. பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் கட்டபொம்முவும் பிரதானி மருது சேர்வைக்காரர்களும் பழமானேரியில் சந்தித்தல்.
சிவகெங்கைப் படையணிகள் மறவாழ் கிளர்ச்சிக்காரர்களது கமுதி முற்றுகையில் கும்பெனி