பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

மண்டிக்கண்மாய் கரை
35. க்கும் தெற்கு இப்படி இசைந்த பெருனாங் கெல்லைக்கு உள்ளிட்ட நஞ்சை புஞ்சை
36. மாவடை மறவடைத்திட்டுதிடல் கீள் நோக்கியகிணர் மேல் நோக்கிய பலன் அரு
37. குதாளி ஆவாரை கொளுஞ்சி முதல் மீன்படுபள்ளம் தேன்படு பொதும்பு சிலதரு
38. பாசானநிதி நிச்சேபமென்று சொல்லப்பட்ட அஷ்ட்டபோக தேசச்வாமியங்க
39. ளும் தானாதி வினிமயவியக்கிறையங்களுக்கும் யோக்கியமாக சகரண்ணிய
40. யோதகர தாராபூறுவமாகப் பட்டயமும் குடுத்து அம்பலத்தாடி கிறாமம் பூதானம் பண்
41. வணிக் குடுத்தபடியினாலே ஆச்சந்திர ஆற்க்கம் புத்திர பவுத்திர பாறம்பரியாயி
42. ஆண்டுகொண்டு சுகமே இருக்கவும் இந்தபடிக்கி இந்த பூதான சாதனம் மெளுதினே
43. ன் கறுப்பனாசாரி கையெழுத்து உ

3. திருவாரூர் செப்பேடு

மன்னர் முத்து வடுகனாத தேவரவர்கள் திருவாரூர்தியாகராஜ சுவாமிகள் திருக்கோயிலில் அன்னதானம் கட்டளைக்காக சிவகங்கைச் சீமையில் உள்ள நாதன்வயல், பாணன் வயல் என்ற இரு கிராமங்களை கி.பி.1750-ல் சர்வமானியமாக வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்த தான சாசனத்தைப் பெற்றுக் கொண்டவர். அந்த திருக்கோயிலின் ஆதின கர்த்தர் அருணாசலத் தம்பிரான் என்பதும் இந்தச் செப்பேட்டில் இருந்து தெரிய வருகிறது.

1. ஸ்ரீமஜெயம் ஸ்வஸ்திஸ்ரீமன் மகாமண்டலேசுவரன் அரியராய
2. தளவிபாடன் பாசைக்கு தப்புவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்
3. டநாடு கொடாதான் பாண்டிமண்டல ஸ்தாபனாசாரியன் சோள மண்ட 4. லப் பிறதிட்டானாசாரியன் தொண்டமண்டல சண்டபிறசண்டன் ஈழ
5. முங் கொங்கு யாழ்ப்பாணமும் கண்டு கெசவேட்டை கொண்டருளிய ராசாதிராச
6. ன் ராசபரமேசுரன் ராசமாத்தாண்டன் ராசகுலதிலகன் தாலிக்கு வேலி தளசிங்கஞ் இள
7. சிங்கம் ஆத்தில்பாச்சி கடலில் பாச்சி மதிரைமண் கொண்ட சேமத்தலை விளங்குமி
8. ரு தாளினான் வடகரைப்புலி சேதுகாவலன்தனுக்கோடி காவலன் சேது