பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 71

48. குடி எல்லைப்புரவுகும் கிளக்கு வடபாற்கெல்லை கீள்ச்சே
49. த்தூர் புஞ்சைப் புரவுக்கும் வளையா தேவர் குடியிருப்புக்
50. கும் தெற்கு இப்படி யிசைந்த பெருநான்கெல்லைக் குள்ளிட்ட நஞ்சை
51. சை புஞ்சை திட்டு திடல் நிதி நிற்சேப செலதருபாசானம் அட்சனிய ஆக
52. மியமென்று சொல்லப்பட்ட அட்டபோக தேச சுவாமியங்களும் தானாதி வில
53. மய விக்றியங்களுக்கும் யோக்கியமாக சகல சமுதாயமும் சறுவமானிய
54. மாக ஆசந்திராற்கம் சீஷ பாரம்பரைக்கும் காசி அன்னதான தற்ம
55. த்துக்கு விட்டுக் கொடுத்தப்படியினாலே ஆண்டனுபவித்துக் கொள்ளுவாரா
56. கவும் இந்த தற்மத்துக்கு இதம் பண்ணினவன் காசியிலே சிவப்பிரதிட்டை விட்
57. டுணுப்பிரதிட்டை கோடி பிரம்ம பிரதிட்டையும் பண்ணி புண்ணியத்
58. தை யடைவாராகவும் இதற்கு யாதாமொருவன் அகிதம் பண்ணினவன்
59. காசியிலேயும் ராமீசுரத்திலேயும் கோடி காராம்பசுவையும் கோடி பி
60. ராமணாளையும் கொன்ற பாவத்தை யடையவராகவும் இந்தபடிக்கு கு
61. மர குருபரத் தம்பிரானவர்களுக்கு முத்து வடுகநாதப் பெரிய உடைய
62. யாத் தேவர்கள் இந்த அன்னதானப் பட்டயம் எழுதினே மதுரையிலி
63. ருக்கும் வெள்ளாளரில் சொக்கனாத பிள்ளை குமாரன் சங்கர நாராயண
64. ன் எழுத்து இந்தப் பட்டயம் வெட்டிநேன் தையல் பாகம் உ
65. ஸ்வதத் தாத்வி குணம் புண்யம் பரதத்தாநு பாலநம் பாதத்தாப ஹா
66. ரேண ஸ்வதத்தாம் நிஷ்பலம் பவேத் உ

8. கொடி மங்கலம் செப்பேடு

திருவாவடுதுறை குருமகா சன்னிதானத்திடம் மன்னர் முத்து வடுகநாதர் கொண்டிருந்த இணையற்ற குருபக்தியின் சான்றாக அமைந்துள்ள மற்றுமொரு ஆவணம் இந்தச் செப்பேடு. கி.பி.1767ல் மன்னர் முத்து வடுகநாதர், திருவாவடுதுறை பண்டார சன்னதியில் அம்பலவாண சுவாமி பூஜைக்கும் மகேசுவர பூஜைக்கும் உடலாக சிவகங்கைச்சீமையில் உள்ள நாகமுகுந்தன்குடி என்ற கிராமத்தை இறையிலியாக வழங்கியதற்கான ஆவணம் இந்தச் செப்பேடு. திருவாவடுதுறை மடத்தில் இந்தச் செப்பேடு உள்ளது.

1. சுவத்திஸ்ரீமன் மகாமண்டலேசுரன் அரியராயிர தள விபாடன் பாசைக்குத்த
2. ப்புவராயிர கண்டன் மூவாயிர கண்டன் கண்டநாடு கொண்டு