13pa அறமும் துறவும்
நீர் விளையாட்டு:
அன்னையர் பிரிவை எண்ணி வாடும் அரசனாகிய சீவகன் மனத்தைப் பிற வழிகளில் திருப்ப நினைத்தனர் அமைச்சர் முதலியோர் ; எனவே, அரசன் மகிழ்ந்துதிறக்க நீர் விளையாட்டுஒன்றை ஏற்பாடு செய்தனர்;
அனைவரும் புனல் வாவியைச் சார்ந்தனர். சீவகன் தன் மனைவியர் எண்மரோடு தனித்த வாவியில் புனல் விளையாட்டயர்ந்தான்.
பல பாடல்களால் அவர்தம் புனல் விளையாட்டையும் பருவ _நுகர்வையும் பலபடப் பாராட்டுகின்றார் தேவர்.
ஆம். பாராட்ட வேண்டுவதுதானே ! பலரை மனைவியராக்கி ௮வரது மையலிலெல்லாம் பட்டுழல்கின்றசீவகனைச் சிற்றின்பம் சிகரத்திலே தோன்றச் செய்த தேவர் இனிச் சில பாடல்களுக்குள் அவனது துறவு நிலையைக் கூறப்போகின்றார். அத்துறவு நிலை கூறு முன்வந்த சீவகன் தன் மனைவியர் எண்மரோடும் மகிழ்ந்துறையும் விசாயாடல் இதுவாயின், கூறுதிருக்க முடியுங்கொல்! மேலும், தனித்தனியாக ஓவ்வொரு மனைவியோடும் பெற்ற காம இன்பத்தை இது வரை கூறினவை போக, அனைவரையும் ஒன்று சேர்த்துக் காட்டும் நற்காட்சியும் இதுதானே? மணம் புரிந்த எண்மரும் மனத்தால் வேறு பாடு இன்றிக். தம் காதலனோடு கலந்தாடும் இன்பகெறி தேவர் உள்ளத்தைக் தூண்டி, அவனது இன்ப நுகர் வைப் பாட வைக்கின்றது. பாடுகிறார் பல பாடல்கள், பருவத்தின் பின் பருவமாக. அவர் வர்ணிக்கும் திறனும் பிறவும் அறிந்தறிந்து இன்புறத்தக்கன,
நன்மக்கள் பிறந்தார்கள் :
இன்பத்தில் திளைத்த சீவகனுக்கு மனைவியர் எண்மர்மூலம்
இல்வாழ்வின் நன்கலனாகிய கன் மக்கட்பேறுஉண்டாயிற்று, மனைவியர் எண்மரும் கருக தாங்கித்