பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/159

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுரமஞ்சரி இலம்பகம்157



“பசி” என்றான்.

”இங்கே ஆடவர்கள் வரக்கூடாது. மகளிர் மட்டும்’ என்று போடப்பட்டுள்ள பேருந்தில் நீ எப்படி வரலாம்?” என்றாள்.

“முதலில் ஒட்டுநரையும் நடத்துனரையும் மாற்றுங்கள்” என்றான்.

“அம்மா ஆணை, எந்த ஆடவரையும் அனுமதிக்கக் கூடாது” என்றாள்.

“கிழவன்; மூப்பினால் தளர்ந்தவன்; என்னைக்கண்டு நீங்கள் இளம் பிஞ்சுகள் அஞ்சுகிறீர் என்றால் உங்கள் மனத் திண்மை உறுதி இதற்கு அர்த்தமே இருக்காது.”

“நிச்சயமாக யாரும் என்னைக் கண்டு மோகிக்க மாட்டார்கள்” என்றான்.

“காய்ந்த மாடு; கோரைப் புல்லையும் தின்னும்” என்று கூறி நகைத்தாள் அந்தக் குண்டுமணி.

இருவரும் சிரித்தனர்.

“சட்ட இலாக்காவுக்கு எழுதித்தான் அவர்கள் கருத்துக் கேட்டுப் பின்தான் உன்னை அனுமதிப்போம்” என்றாள்.

இந்தச் சிக்கல்களைத் தீர்க்க வாசலுக்கு அடுத்த அறையில் நிரந்தரமாக ஒரு வழக்கு அறிஞர் அமர்த்தப்பட் டிருந்தார். அவர் “பரவாயில்லை; உள்ளே விடலாம்; சட்டம் என்பது வெறும் எழுத்துக்கள் அல்ல; அதன் நோக்கம் அறிந்து செயல்படுவதுதான் புத்திசாலித்தனம்” என்று அவர் திருவாய் மலர்ந்தருளினார். அவர் உச்சிக் குடுமி வைத்திருந்ததால் அவர் சொற்களுக்கு மதிப்புத் தர வேண்டியது ஆயிற்று.

சீவகன் உள்ளே அனுமதிக்கப்பட்டான். சாப்பாடு போடப்பட்டது; வயிறார உண்டான்.