பக்கம்:சுதந்திரப் பறவைகள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ2 O வல்லிக்கண்ணன் விருக்கும். இது சாதாரணக் குழந்தை. நன்றி என்று வாய்விட்டுச் சொல்லும் நாகரிகம் கற்காத பிள்ளை. சந்தோஷம் பூத்துக் குலுங்கும் முகத்தை அவர் பக்கம் இருப்பித் திருப்பிக் காட்டியபடி-திரும்பித் திரும்பி நோக்கிச் சிரித்தவாறே-அது பள்ளிக்குச் சென்றது. அந்தக் காட்சி சிவசிதம்பரத்தின் உள்ளத்தில் தனி ஒளி பாய்ச்சியது. அவர் முகத்திலும் சிரிப்பு ரேகையிட்டது. அன்று மாலை, அந்தப் பிள்ளையை அழைத்துக் கொண்டு அதன் தாய் வந்தாள். மரியாதை காட்டி வணங்கினான். தன் கஷ்டங்களைப் புலம்பினாள். பணம் வந்ததும், நோட்டுக்கு அவர் கொடுத்து காசை திருப்பித் தத்து விடுவதாகச் சொன்னாள். - "அதெல்லாம் வேண்டாம். அது நல்லாப் படிக்கட்டும். ஒழுங்கா ஸ்கூலுக்குப் போகட்டும். அதை அடிக்காதே" என்றார் அவர்,

  • சசி.சாமி என்று கும்பிட்டாள் அவள்.

'அதுக்கு எப்பவாவது நோட்டு, பென்சில் ஏதாவது தேவைப்பட்டால், என்னிடம் கேட்கச் சொல்லு. நான் வாங்கித் தருவேன்’ என்றும் கூறினார். அவள் தலையாட்டி, கும்பிடு போட்டு, மகளைக் கூட்டிக் கொண்டு போனாள். சிவசிதம்பரம் இப்படிப் பலருக்கும் சிறு சிறு உதவிகள் செய்வதில் உற்சாகம் கொண்டார். அதனால் அவர் மனசில் சந்தோஷம் பூத்தது. அவரிடம் உதவி பெற்றவர்கள், அவருடைய அன்புக்கு. இலக்கான அக்கம் பக்கத்தார், அவரை நேசிக்கலானார்கள்.