பக்கம்:சுதந்திரமா.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 சுதந்தரமா!

தனியே எடுத்துச் சொல்வது பைத்தியக்காரத்தனமா யிருக்கும். - -

இப்போது அப்படி இல்லையே! விமானப் பிரயாணம் ஒரு சிறந்த செயல், எல்லோருக்கும் கிடைக்காதது என்ற எண்ணம் கொஞ்சம் இருந்து வருகிறது. ஆகையால் கான் விமானத்தில் போய் வந்த அநுபவத்தை மற்றவர்கள் தெரிந்து கொள்ள விரும்புவதில் ஆச்சரியம் இல்லை. அவர் களாக விரும்பிக் கேட்கிறது ஒருவிதம். ஆனல் நான் விமா னத்தில் பிரயாணம் செய்தது தெரிந்தால்தானே அந்த அற்புத அதுபவங்களே என்னிடம் கேட்பார்கள் ? 'கான் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்” என்று திருமூலர் சொல்கிருர் நான் அப்படிச் சொல்வதில்லை. 'நான் பெற்ற இன்பத்தைக் கேட்க இவ் வையகம்" என்றுதான் சொல் கிறேன். விமானப் பிரயாண அநுபவம் என்ற அருமை யான இரகசியத்தை நான் மூடி மூடி வைத்துக் கொள்ளும் லோபி அல்ல. எத்தனே பேருக்குத் தெரிவிக்க முடியுமோ, எப்படியெல்லாம் தெரிவிக்க இயலுமோ, அத்தனே பேருக்கு அப்படியெல்லாம் தெரிவிக்கும் தொண்டைச் செய்யலானேன். - - y . - நண்பர் ஒருவர் இராமாயணத்தை விடாமல் பாரா யணம் செய்கிறவர். அவர் இராமாயணத்திலிருந்து சில பகுதிகளே எடுத்துச் சொன்னர். இராம பக்தி மிக்கவர் அவர். சொல்லும்போது அவர் கண்ணில் நீர் வந்தது. 'இராமர் சீதை முதலியவர்கள் புஷ்பக விமானத்தில் வரும் போது...' என்று அவர் சொல்லிக்கொண்டு வந்தார். நான். அப்போது, "புஷ்பக விமானத்தில் வந்தார்களா? எத்தனை பேர் ஏறிக்கொண்டிருந்தார்கள்?' என்று கேட்டேன்.

. 'இராமரும் அவருடைய பரிவாரங்களும் . அதில் ஏறி வந்ததாக வால்மீகி சொல்கிருர்" என்று அவர் சொன்னர். .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/74&oldid=685981" இலிருந்து மீள்விக்கப்பட்டது