பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 களையும் திருமூலர் விரித்துரைக்கின் ருர். முதலி லுள்ள சாக்கிரத்தில் பதின்ைகு கருவிகளுடன் மனம் புருவமத்தியில் நிற்கும். கருவிகள் பதின்ை «ΗΒ ΠΓ 6Υ Ι60Τ : சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் ஆகிய புலன் 5: வசனம், கமனம், தானம், வி ச ர் க் க ம், ஆனந்தம் ஆகிய கன்மவிடயம் 5; மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய கரணங்கள் 4. கண்டன வைந்தும் கலந்தன ஒரைந்தும் உண்டன நான்கு மோதி வுணர்ந்தபின் பண்டை யதிை பகர்ந்தவிச் சாக்கிரம் அண்டம தாக வமர்ந்திருந் தானே --திருமந்திரம் 2.153. இப்பதின்ைகு கருவிகளிலே பத்துமொடுங்கி நான்கு கரணங்களுடன் உயிர் கண்டத்தில் நின்று கனவு கண்டு மறந்துவிடுதல் சொர்ப்பனம் ஆகும். பண்டு மொழிந்த பதிலுைந் தன்னிலே கண்ட மதனிற் கரணங் கலந் ததுதான் மண்டி வனைந்த மனைவாழ்க்கை தன்னிலே கண்டு மறந்துங் கனவது வாமே -திருமந்திரம் 2154. சுழுத்தியாவது கரணம் நா ன் கி ல் சித்தம் அகங்காரம் ஒடுங்கி ஏனைய விரண்டுடன் உயிர் இதயத்தில் நிற்பது.