பக்கம்:சுத்தசன்மார்க்க விளக்கம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி. சிவமயம் திருச்சிற்றம்பலம். திருக்கைலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருத்துறையூராதீனம் பூரீ குமாரதேவர் மடாலயம் பூரீ-ல.ழரீ சுப்ரமண்ய சிவப்ரகாச பண்டாரசந்நிதிகள் உவந்தருளிய ஆசியுரை சிவப்பிரகாசச் செல்வராகிய நம் கண்மணியாம் கு. சீநிவாசன் அவர்கள் எழுதியுள்ள சுத்தசன்மார்க்க விளக்கம் என்ற திருவருள்நெறிநூலைப் பார்த்து மகிழ் கின்ருேம். சிவானுபவத்தை அருட்பிரகாச வள்ளற் பெருமான் நுகர்ந்த செம்மையைத் தெளிவாக எடுத்துக் கூறும் பெருமையுடையது இந்நூல். உயிரனுபவம். அருளனுபவம், சிவானுபவம் என்னும் பேரனுபவங்களும், சிவசாக்கிர முதலான மேல்நிலை அனுபவநிலைகளும் மிக அழகாக விளக்கப்பட்டுள்ளன. இவற்றைப்பற்றி எழுதுவது என்பது அந்நிலை நின்ருர்க்கே இயலுமாதலின் இவற்றை ஆய்ந்தெழுதிய இந்நூலாசிரியரின் பெருமை தெள்ளிதின் புலனுகும். சுத்தசன்மார்க்கப் பெருநெறி நிற்கும் புண்ணி யர்களுக்கு இந்நூல் நல்விருந்தாகும். அருள்நெறிச் செம்மல் டாக்டர் கு. சீநிவாசன் அவர்கள் இத்தகைய தொண்டுகள் செய்து திருவருட்பேறு பெறவேண்டுமாய் எல்லாம் வல்ல சிவபரம்பொருளை வழுத்துவோமாக. விருத்தாசலம், \ பூரீ சுப்ரமண்ய சிவப்ரகாச 22–1–1966. s பண்டாரசந்நிதிகள். திருச்சிற்றம்பலம்.