பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுந்தர காண்டச் சூறாவளி

டாக்டர் சுந்தர சண்முகனார்

38, இரண்டாம் தெரு, வேங்கட நகர்,

புதுச்சேரி — 605011

சுந்தர காண்டச் சுரங்கம் என்னும் நூல் ஒன்று யான் எழுதினேன். அது சென்னை வானதி பதிப்பகத்தாரால் பதிப்பிக்கப்பட்டு 1989-மே திங்களில் புதுச்சேரியில் நடைபெற்ற கம்பன் விழாவில் வெளியிடப் பெற்றது.

அந்த நூலை, வானதி பதிப்பகத்தார், மதிப்புரைக்காக The Hindu என்னும் ஆங்கில நாளிதழுக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதன் மதிப்புரை, என்னால் பெயர் தெரிந்து கொள்ள முடியாத யாரோ ஒருவரால் எழுதப்பெற்று 1990 பிப்ரவரி 6-ஆம் நாள் The Hindu இதழில் வெளிவந்திருக்கிறது. மிகவும் மட்டமான மதிப்புரை அது.

எங்கள் வீட்டில் தின மணியும், Indian Express நாளேடும் வாங்குகிறோம். இந்துவில் (The Hindu) வந்ததை எங்கோ போன இடத்தில் நண்பர் ஒருவர் கூற அறியலானேன். எனது மறுப்புரையை இந்து ஆசிரியருக்கு எழுதினேன். அது வெளியிடப்பட்டதாகத் தெரியவில்லை.

எனக்குக் கடந்த சில திங்கள்களாக, பெரிய நூல் ஒன்று எழுதி அச்சுக்குக் கொடுத்துக் கொண்டேயிருத்தல், கற்றை கற்றையாக வரும் இரண்டு நூல்களின் மெய்ப்புகளைத் (Proofs) திருத்துதல், 1990 மே திங்களில் நடைபெற்ற புதுவைக் கம்பன் கழக வெள்ளி விழாவில் வெளியிட 'அயோத்தியா காண்ட ஆழ்கடல்' என்னும் புது நூல் எழுதியது, தொடர் சொற்பொழிவு - முதலிய வேலைகள்