64
- வல்யான் வல்விலங்கு வல்லு றெல்லாம்
ஏவல்செய் வல்லுகன்யான்; வல்லி:யங்கள் கூவல்செய் வனம்வாழ்வேன், வல்லுர கம்போய்க் குலவல்செய் வல்லுளிகள் மேயும் ஈங்கே! துவல்செய் மரமலர்கள் இடைநு ழைந்து
துருவல்தான்; துறுவல்ஏன்? வல்லே ருேசை கோவல்செய் வல்லபந்தான் நோய்போ லாகும்;
நூவல்தான் நீர்பாய்ச்சும் வேலை, நன்று.
உழுவல்பேரன்பாலே உலவல் வேண்டும்;
ஊடுருவல், தடைபடுத்தல், உசாவல் ஆகா!
கழுவல்ஏன்? நல்லதுகண் டுதவல் எங்கே?
நாவல்காய் கனிபோல இனிப்பா நல்கும்? தழுவல்மெய் சோர்ந்திருந்தால் உணர்வு மல்கும்,
தடவல்கை பிடித்தவரின் மனத்தைப் போலாம்; கழுவல்தான் கைவிடுதல் துன்ப நாளில்;
கடாவல்வீண், கருத்தெண்ணிப் பார்த்தால் போதும்
வல்மீகம் கரையான்புற் ருகும்; பின்ள்ை
வல்லடியால் நாகத்தின் இருப்பிடம் ஆம்! வல்லவரே நல்லவராய் மாறி நின்ருல்
வல்லாங்கு வாழ்ந்திடலாம்; புலவல் ஏது? வல்லாரை, விடவல்லி, கார வல்லி,
வல்லிசம்போல் மூலிகைகள் கொடுமை தீர்க்கும். வல்லாளன் முறுவல்தான் பனுவல்; கொள்கை
மருவல் செய் உருவத்தைத் துவ்வல் மெளவல்!