பக்கம்:சுயம்வரம்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

109



ஆனாலும் அவன் அதைச் சமாளித்துக் கொண்டு, “'அம்மாவிடம்?" என்றான் அடுத்தாற்போல்.

“ஊஹூம்.”'

அப்பாடா இப்போதைக்குப் பிழைத்தேன்' என்று எண்ணிப் பெருமூச்சு விட்ட அவன், 'சரி, வா போவோம்!” என்றான்.

'எங்கே?' என்ற அவள், “'இதைக்கூட நான் கேட்டிருக்கக்கூடாது'” என்றாள் தன் உதட்டைச் சட்டென்று கடித்துக்கொண்டு.

'கேட்டால் என்னவாம்?' என்றான் அவன்.

'அது அதிகப்பிரசங்கித்தனம் இல்லையா?" என்றாள் அவள்.

நீ அதிகப்பிரசங்கியாகவே இரு; அதுதான் இப்போதைக்கு எனக்கு நல்லது' என்ற அவன், 'இப்போது நாம் எங்கே போகப் போகிறோம், தெரியுமா? நீ உன் அம்மாவிடம் சொல்லிவிட்டு வந்த பொய்யை மெய்யாக்க' என்றான்.

"அப்படியென்றால்... '

'அசடு, அசடு! அதாவது, நிஜமாகவே நாம் சினிமாவுக்குப் போகப் போகிறோம் என்று அர்த்தம்; இப்போதாவது புரிந்ததா?’ என்றான் அவன், அதற்குள்ளாவது ‘இனி என்ன?’ என்ற பிரச்னையிலிருந்து தப்ப ஏதாவது ஒரு வழி பிறக்காதா?’ என்ற எண்ணத்தில்.

அதை அவள் கண்டாளா? 'புரிகிறது. அத்தான், புரிகிறது! ஆனால் இப்போது சினிமாவுக்குப் போவதாயிருந்தால் நீங்கள் மதனாவையல்லவா அழைத்துச் செல்ல வேண்டும்? என்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/112&oldid=1384871" இலிருந்து மீள்விக்கப்பட்டது