பக்கம்:சுயம்வரம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

117

 பக்கத்தில் யார் உட்காருவது?’ என்ற சர்ச்சையில் இறங்கிய இரண்டு டைட் - பாண்ட்'டுகள் திடீரென்று “ஜேம்ஸ்பாண்ட்” பாணியில் 'கும், கும்’ என்று குத்திக் கொள்ள, 'கட் - பாடி’ கண்கள் மட்டுமே சிரிக்க எழுந்து வாசலை நோக்கி, 'கமான் மை டியர், ஐ ஆம் ஹியர் என்று தன் மியாவ், மியாவ்' குரலில் அழைக்க, அவளுக்கென்று அவளுடன் வந்திருந்த யாரோ ஒரு தடியன் வந்து அவளுக்குப் பக்கத்தில் ஜம்மென்று உட்கார, "ஐ ஆம் வெரி சாரி, ஐ ஆம் வெரி வெரி சாரி என்று இரண்டு டைட் பாண்ட்'டுகளும் ஒன்றையொன்று பார்த்து அசடு வழியச் சிரித்துக்கொண்டே உட்கார, "அடேயப்பா என்ன அவசரம் இவர்களுக்கு?' என்றாள் நீலா.

'“இப்போது எதிலும், எல்லாவற்றிலும் அவசரம்தான்; ராக்கெட் யுகமல்லவா?' என்ற மாதவன் கைக் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, "படம் ஆரம்பமாக இன்னும் பத்து நிமிஷம் இருக்கிறது; ஆளுக்கு ஒரு ஐஸ் கிரீம் சாப்பிடுவோமா?”" என்றான்.

'“இங்கேயா?”

“வேறு எங்கே சாப்பிடுவது, இங்கேயேதான்'”

“'இத்தனை பேருக்கு மத்தியிலா?”

“ஆமாம். அதோ பார், அங்கே எத்தனை பேர் அப்படிச் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்று'”

“ஐயே அவர்கள் ஐஸ் கிரீம் சாப்பிடுவது போலவா இருக்கிறது? ஐஸ் கிரீம் சாப்பிடாதவர்களைப் பார்த்து அழகு" காட்டுவதுபோல் அல்லவா இருக்கிறது' என்றாள் அவள், மீண்டும் சிரித்துக்கொண்டே.”

“'ஸ், சிரிக்காதே! அவர்கள் உன்னைப் பட்டிக்காடு' என்று சொல்லிவிடுவார்கள்! ”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/120&oldid=1384790" இலிருந்து மீள்விக்கப்பட்டது