பக்கம்:சுயம்வரம்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

152

சுயம்வரம்

“அதற்கும் காரணமாயிருந்தவர்கள் அருணாவும் ஆனந்தனும் தான். அவர்கள் நம்மைப் பிரித்து வைப்பதற்காக என் அப்பாவுக்குக் கொடுத்த ஒரு பொய்த் தந்தி, நம்மை சேர்த்து வைப்பதற்கு உதவியிருக்கிறது!” என்றான் அவன்.

“பாவம், இனி அந்த அருணாவும், நீலாவும்...”

மதனா முடிக்கவில்லை; “அவர்கள் இருவருமே நம் அனுதாபத்துக்கு உரியவர்கள்தான். ஆனால் வாழும் முறையால், அருணா பேயாகியிருக்கிறாள்; நீலாவோ தெய்வமாகியிருக்கிறாள். நம்மால் அவர்கள் இருவரைப் போல ஆக முடியவில்லை; அதனால் சாதாரண மனிதர்களுக்கு உரிய சகல பலவீனங்களுடனும் நாம் இன்று நம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடரப் போகிறோம்!” என்றான் மாதவன்.


முற்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/155&oldid=1384533" இலிருந்து மீள்விக்கப்பட்டது