விந்தன்
71
அருணா சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்று மாதவன் கேட்டான்.
"எனக்காக உங்களை ஒரே ஒரு கணமாவது கவலைப்பட வைக்காவிட்டால், எனக்காக உங்களை ஒரே ஒரு சொட்டுக் கண்ணீராவது விட வைக்காவிட்டால் நான் உங்களைக் காதலிப்பதும் ஒன்றுதான்; காதலிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்."
"ஏன்?"
"என்னுடைய காதல் உயிருள்ள காதலாயிருக்க வேண்டுமென்றும், அது ஏதாவது ஒரு வகையில் உங்களை உறுத்த வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன்."
"வீண் முயற்சி!"
"முயற்சி யாருடையதாயிருந்தாலும் அது எப்போதும் வீணாவதில்லை."
"சரி, அதையும் பொறுத்துப் பார்ப்போம்; அப்புறம்?"
"நான் சொல்ல வந்தது..."
"என்ன?"
"உங்கள் அருமை மதனாவைக் காணோம்!"
"என்ன!"
"இப்போது வாயைப் பிளந்து என்ன பிரயோசனம்? அப்போது நீங்கள் அவளுடன் வாழத் தவறி விட்டீர்கள்!"
"யார், நானா?"
"ஆமாம்; மற்ற உறவுகளையெல்லாம் விட்டுவிட்டு 'நீயே உறவு' என்று நீங்கள் எப்போது அவள் கரம் பற்றத்