பக்கம்:சுயம்வரம்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

71


அருணா சிரித்தாள்; "ஏன் சிரிக்கிறாய்?" என்று மாதவன் கேட்டான்.

"எனக்காக உங்களை ஒரே ஒரு கணமாவது கவலைப்பட வைக்காவிட்டால், எனக்காக உங்களை ஒரே ஒரு சொட்டுக் கண்ணீராவது விட வைக்காவிட்டால் நான் உங்களைக் காதலிப்பதும் ஒன்றுதான்; காதலிக்காமல் இருப்பதும் ஒன்றுதான்."

"ஏன்?"

"என்னுடைய காதல் உயிருள்ள காதலாயிருக்க வேண்டுமென்றும், அது ஏதாவது ஒரு வகையில் உங்களை உறுத்த வேண்டுமென்றும் நான் விரும்புகிறேன்."

"வீண் முயற்சி!"

"முயற்சி யாருடையதாயிருந்தாலும் அது எப்போதும் வீணாவதில்லை."

"சரி, அதையும் பொறுத்துப் பார்ப்போம்; அப்புறம்?"

"நான் சொல்ல வந்தது..."

"என்ன?"

"உங்கள் அருமை மதனாவைக் காணோம்!"

"என்ன!"

"இப்போது வாயைப் பிளந்து என்ன பிரயோசனம்? அப்போது நீங்கள் அவளுடன் வாழத் தவறி விட்டீர்கள்!"

"யார், நானா?"

"ஆமாம்; மற்ற உறவுகளையெல்லாம் விட்டுவிட்டு 'நீயே உறவு' என்று நீங்கள் எப்போது அவள் கரம் பற்றத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/74&oldid=1384726" இலிருந்து மீள்விக்கப்பட்டது