பக்கம்:சுயம்வரம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

சுயம்வரம்


பின்பற்றுபவர்கள் எத்தனையோ பேர் இந்த உலகத்தில் உண்டு. அவர்களில் ஒருவன் கூடவா கிடைக்காமற்போய் விடுவான் அவளுக்கு? தாராளமாகக் கிடைப்பான். ஜஸ்ட் ஃபார் அன் எக்சேஞ்ஜுக்குத்தானே?"

"நல்ல எக்சேஞ்ஜுடா, உன் எக்சேஞ்ஜ்! அப்படியே கிடைத்தாலும் அவனுக்காக அவள் தன் கற்பைக் கைவிட முடியுமா? விட்டால் சமூகம் அவளை ஏற்றுக் கொள்ளுமா?"

"என்னைக் கேட்டால் 'சமூகம்' என்று ஒன்று இல்லவே இல்லை என்பேன்! இல்லாத ஒன்றைக் கற்பித்துக்கொண்டு எடுத்ததற்கெல்லாம் அதற்குப் பயந்து கொண்டிருப்பதில் என்ன பிரயோசனம்? அப்ஸல்யூட்லி ராங்! 'கற்பு, கற்பு' என்று கதைப்பதெல்லாம் நம்மவர்களிடம்தான் இருக்கிறதே தவிர, மற்றவர்களிடம் அது இருப்பதாகத் தெரியவில்லை."

"கற்பு வேண்டுமானால் கதையாக இருந்துவிட்டுப் போகட்டும்; ஒழுக்கம்கூடவா கதை?"

"அது உண்மையாகத்தான் இருக்கட்டுமே! அதனால் என்ன, ஒரு தடவைக்கு இரண்டு தடவையாகக் குளித்து விட்டால் போச்சு!"

"குளித்தால் உடம்பில் படிந்த அழுக்கு வேண்டுமானால் போகலாம்; உள்ளத்தில் படிந்த அழுக்கு போகாது."

"அதற்காக நான் ஆறிப்போன இட்லியைத்தான் ஆயுள் பூராவும் தின்று கொண்டிருக்க வேண்டும் என்பது என்ன நீதி? ஐ வாண்ட் ஹாட் இட்லி!"

"பெண் இட்லி அல்ல, பிரதர்..."

"தோசையாயிருக்கட்டும்!"

"தோசையும் அல்ல, அவள்..."

"பூரியாயிருக்கட்டும்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/81&oldid=1384749" இலிருந்து மீள்விக்கப்பட்டது