பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

K 166 கவிஞர் முருகு சுந்தரம் بخشها பட்டணம் பொடி வரை அன்று சரளமாகப் பேசினார் சுரதா, நேரம் போனது தெரியவில்லை. பூம்புகார் விழாவில் கவியரங்கத் தலைமை கண்ணதாசனுக்கா சுரதாவுக்கா என்பதில் நிகழ்ச்சி அமைப்பாளர்களிடையே பெரிய குழப்பம். கடைசியில் கவியரங்கத்தலைமை கண்ணதாசனுக்குக் கொடுக்கப்பட்டது. தமிழறிஞர் கி.வா.ஜ. தலைமையில் நடை பெற்ற வரலாற்றுக் கருத்தரங்கில் பலருள் ஒரு பேச்சாளராக முதல்நாள் நிகழ்ச்சியில் சுரதா இடம் பெற்றார். தம்மை ஒதுக்கிவிட்டார்கள் என்று சுரதா கருதிவிடக் கூடாதே என்பதற்காகக் கொடுக்கப்பட்ட ஆறுதல் பதவி அது. சுரதாவுக்கு அதில் வருத்தந்தான். உறுமிக்கொண்டே இருந்தார். இரண்டாம் நாள் விழா நிகழ்ச்சிகளைக் காண நானும் சுரதாவும் புறப்பட்டோம். டாக்டர் மு. வரதராசனார் தலைமையில் சிலப்பதிகாரப் பட்டி மண்டபம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நானும் சுரதாவும் பார்வையாளர்களிடையே சென்று அமர்ந்தோம். எங்கள் வருகைக்காகக் காத்துக் கொண்டிருந்தவர் போலக் கவிஞர் கருணானந்தம் அவசரமாக மேடையைவிட்டு இறங்கி வந்தார்; என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு பந்தலுக்கு வெளியே ஓடினார்.