பக்கம்:சுரதா ஓர் ஒப்பாய்வு.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ఫ్రో சுரதா ஓர் ஒப்பாய்வு 23 3. சுரதாவுடன் நேர்காணல்! சுரதாவின் பேச்சும் எழுத்தும் சுவையானவை. ஏன்? சுரதாவே மிகச்சுவையானவர். அவரோடு பேசிக் கொண்டிருப்பது காதலியோடு பேசிக் கொண் டிருப்பது போலிருக்கும்; நேரம் போவதே தெரியாது. ஒரு நாள் மாலை நானும் கவிஞர் அப்துல் ரகுமானும்சுரதாவை மெரினாக்கடற்கரைக்குஅழைத்துச் சென்று உட்காரவைத்து, அவரைப் பற்றியும் அவருடைய கவிதைக் கொள்கை பற்றியும் இரண்டு மணிநேரம் ஓயாமல் கேள்விகள் கேட்டோம். அவரும் சலிப்பில்லாமல் பதில் கூறினார். சுரதாவைப் பற்றி ஆய்வு செய்வதற்கு முன்னால், அவரோடு நாங்கள் மேற்கொண்ட உரையாடலை வெளியிட்டால், படிப்பவர்கள் அவரைப் புரிந்து கொண்டு அவர் பற்றிய ஆய்வினைப் படிக்க வசதி யாக இருக்கும் என்ற எண்ணத்தோடு கேள்வி-பதில் வடிவிலே அதை இங்கு வெளியிட்டிருக்கிறேன்.