பக்கம்:சுரதா கவிதைகள் (கையடக்கப் பதிப்பு).pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 சுரதாகவிதைகள்

சத்தியம் தவறாதே - தாய் நாட்டினை மறவாதே தட்டிப் பறிக்காதே - தன்

மானம் இழக்காதே

--சத்தியம் தவறாதே"படப்பாடல்

செந்தமிழ் நாடு சிறந்த நாடு: இந்த நாடு இயற்கையின் வீடு:

எண்ணெய்யாற் றாமலே எரியும் சூரியன் தனித்தே இயங்கும் தகுதி உடையது இந்த உலகில் செந்தமிழ் நாடும் தனித்தே இயங்கும் தகுதி உடையது.

அந்தியிலே தென்றல் அசைந்திடும் நாடு அறிஞரும் கலைஞரும் நிறைந்துள்ள நாடு முத்தும் அறிவினில் மூத்தநன் னாடு முன்வைத்த காலைப் பின்வைக்கா நாடு:

- (இசைப்பாடல்)

சாவதெளில் உரிமைக்குச் சாவ தன்றோ தமிழ்நாட்டின் வரலாற்று வீர மாகும்.

- தால் : தேன்.மழை