மூலபாட ஆய்வு
ல்
183
கொள்ளலாம், என்றாலும் திருமால் தன் அடியால் அளந்து கடந்த நிலம் எல்லாம் என்னும் பொருள் தரும் இவ்வடியில் நிலம் எல்லாம் என்று கூறுவதால் நிலம் பன்மையாகாது; எல்லாம் என்பது அவ்வொருமைக்கும் பொருந்தும். ஆதலின் தாயது ஆகிய நிலம் எல்லாம் என்ற பொருள் அமைப்பில் தாயது என்று கொள்ளுவதே பொருத்தமான பாடமாகும்.
முற்று - எச்சம்
-
9,71
'குரம்புகொண் டின்தேன் பாய்த்தினன்; நிரம்பிய " வேறு : குரம்புகொண் டின்தேன் பாய்த்தி நிரம்பிய"
பாய்த்தி நிரம்பிய என்பது வினை எச்சத் தொடராய் நின்று பொருள் தருகிறது. ஆயினும் இப்பாடலின் முன் பின் தொடர்கள் முறையே ஒடுக்கினன்; ஒல்லகில்லேன்; செய்தனன்; ஏற்றினன்; அமைத்தனன் என்பனவாகிய முற்று வினைகளையே கொண் டுள்ளன. ஆதலின் இவ்வடியிலும் முற்று வினைகொடுத்து மீண்டும் வேறு தொடரைத் தொடங்குவதே இலக்கணமுடையது ஆதலின் பாய்த்தினன் என்ற சொல்லையே பாடமாகக் கொள்ளவேண்டும். இலக்கணமுடையது - கொச்சைச்சொல்
"உம்பர்கட்கரசே... யோகமே! ஊத்தையேன் தனக்கு
வேறு : "......யோகமே! ஊற்றையேன் தனக்கு
என்று
ஊத்தையேன் என்பது கொச்சைச்சொல் என்றும் ஊற்றையேன் என்பதே இலக்கணமுடைய தூய சொல் என்றும் கொண்டு ஊற்றையேன் பதிப்பித்துள்ளனர். மலமுடையேன் என்னும் பொருள்தரும் தூய சொல் ஊத்தையேன் என்பதேயாகும். (ஊத்தை-அழுக்கு) ஊற்றை என்பது அப்பொருள் தருவதில்லை• அறிவுடைமை, ஆற்றல் என்னும் பொருள் தரும் ஊற்றம் என்பதன் திரிபேயாகும். எனவே ஊத்தையேன் என்பது இலக்கணமுடைய பாடமாகிறது.
5.முடிவு - மூலபாடம் - சிறந்த பாடம் : அகச்சான்று புறச் சான்றுகளும் இலக்கண அமைதிகளும் துணைக்கருவிகளாக அமையத் தேர்ந்தெடுக்கப்படும் பாடங்களையே மூலபாடம் என்று
உறுதிப்படுத்துகிறோம். ஆயினும்,
71.
திருவாசகம். திருவண்டப்பகுதி,வரி- 173. 72. திருவாசகம், பிடித்தபத்து-1,