பதிப்பும் அச்சும்
7. பதிப்புமுறை
“நூல்களைப் பதிப்பிப்பதில் ஆராய்ச்சி என்பதற்கு இட மில்லையே; ஏட்டிலுள்ளதை அப்படியே பதிப்பிடத்தானே வேண்டும் என்று சிலர் கருதுவர்... முதலாவது தமிழ் ஏடுகளில் எழுதப்பட்டிருப்பனவற்றை வாசிப்பதே மிக்க சிரமமான வேலையாகும். உதாரணமாக, பொன் என்பதை - பொன், போன,பேரன் என்று வாசிக்கலாம். இதை நிச்சயப்படுத்தப் பொருளுணர்ச்சி,
வேண்டும்...
செய்யுளோசையுணர்ச்சி
'யாரினு மினியன் பேரன் பினனே' என்பதை 'யாரினு மினியன் போன பின்னே'
1
இருத்தல்
என்று அச்சிட்டனர்”1 சுவடியின் தன்மையை உணர்த்தும் இக் கூற்று பதிப்பின் அருமையை எடுத்துக் காட்டுகிறது. சுவடியின் தன்மை ஒருபுறமிருக்க, பொதுவாக அச்சிடுதல் என்பது பதிப்பித்தல் என்பது வேறு என்பதையும் அறிய வேண்டும்.
வேறு;
"இப்பதிப்பில் பலவான புதிய பாடங்களை அவர்கள் கொண்டிருக்கிறார்கள். யாவும் திருத்தமான
பாடங்கள்.
அந்த வகையில் இதுவே சிவக்கொழுந்து தேசிகருடைய பதிப்புக்குப் பிறகு முதன் முதலாக வந்த பதிப்பு. மற்றவை யாவும் மறு அச்சுக்களே; பதிப்புக்கள் அல்ல’2
என்பது இவ்வுண்மையைத் தெளிவுபடுத்தும்.
1. தமிழ்ச் சுடர் மணிகள், பக். 316. 2. திருவாசகக் குறிப்புக்கள், பக். 156