பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iš

நன்கு தெரிந்த நடிகைஜெய லலிதா நித்தம் இருமுறை நீராடு வாராம்.

விடிந்ததும் ஒருமுறை வெந்நீரில் குளியலாம்! எல்லாம் முடிந்தபின் இன்னொரு குளியலாம்:

ஒருசில நடிகையர் ஒவ்வொரு நாளும் வீட்டிலோ, வெளியிலோ, வெவ்வே றிடத்திலோ, அதனால் இதனால் அழுக்கடை வதனால், நாள்தோறும் பலமுறை குளிப்பது நன்மைதான். புறவுடல் அழுக்கெலாம் போவதும் உண்மைதான்.

எனினும் சற்றே இதனைக் கேளிர்; ஆடை பாதியும் அழகு பாதியும் தெரியக் காட்டும் திரைப்பட நடிகையோ அறிஞனோ, கலைஞனோ அரசியல் தலைவரோ, மடாதி பதியோ, மக்கள் திலகமோ, கோப்பைக் கவிஞனோ, கோயில் குருக்களோ, மற்றிங்கு வாழும் மக்கள் கூட்டமோ, ஆயிரம் தடவை அன்றாடம் குளிப்பினும் மிகத்தூய்மை பெறுவது மேனியே யன்றி அகத்தூய்மை நீரால் அமைவ தில்லையே!