பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

żÖ

குமாரி உஷாவோ குரங்கு வளர்க்கிறாள்.

அடிக்கடி இரவில் நீராடக் கூடிய குமாரியின் வீடொரு குரங்காடு துறையாம்.

நச்சினார்க் கினிய நடிகை சச்சுவோ தும்பைப்பூப் போன்ற சுண்டெலி வளர்க்கிறார்.

திருமணம் ஒருமுறை, மறுமணம் ஒருமுறை.

ஆவல்தீ ராததால் அடுத்தும் ஒருமுறை பச்சைத் திருமணம் பண்ணிக் கொண்ட

விஜய நிர்மலா வெண்முயல் வளர்க்கிறார்.

விநோத நடிகையின் வீட்டில் வளரும் சலவை முயலுக்குத் தழைகளே சாதமாம் ! ஐந்தாறு கணிகளே அதற்குப் போதுமாம் !

கால்விரல் நகங்களே அதற்குக் கத்தியாம். அழகியின் மடியே அதற்கு மெத்தையாம்.

நீண்ட செவிகளும் நெல்லிக்காய் விழிகளும், வெடித்த பருத்திபோல் வெள்ளை நிறமும் கொண்ட சிறுமுயல் குதித்துக் குதித்து விளையாடும் காட்சியை வேடிக்கை பார்ப்பதே பூச்சர நடிகையின் பொழுது போக்காம்.

மானை வளர்ப்பதும், மயிலை வளர்ப்பதும் குமாரி ஒருத்தி குரங்கை வளர்ப்பதும், அழகி ஒருத்தி அணிலை வளர்ப்பதும்,