இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மார்பில் எனக்கு
மச்சமிருக்கிறது
மறுவென்னல் களங்கம்; மருவென்னல் மச்சம்; மறுவோ, வெண்ணிலா வயிற்றில் இருக்கும். மச்சமோ, ஒருசிலர் மார்பிலும், தோளிலும், தொடையிலும் இடையிலும் தூங்கிக்கொண் டிருக்கும்.
இறவாத புகழே சிறந்த எச்சமாம். தானே தோன்றும் தழும்பே மச்சமாம்.
மலர்ந்தமே லுதட்டில் மச்ச மிருப்பின் பேச்சு வன்மை பெற்று விளங்குவான் என்று கூறுவர். இஃதுண்மை யாயின் அக்குன் றக்குடி அடிகளா உதட்டிலும், ம. பொ. சி, உதட்டிலும் மச்சமா உள்ளது?