பக்கம்:சுவரும் சுண்ணாம்பும்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27

கோவலன் மனவிக்குக் குழந்தையே இல்லை!

கழித்தலாய் இருந்து, கல்யாண மானபின் கூட்டலாய் மாறிக் குடும்பம் நடத்தும் கிசுகிசு நடிகை கே.ஆர். விஜயா பெண்குழந்தை ஒன்று பெற்றுள்ள போதிலும், ஆண்குழந்தை ஒன்றும் அவர்பெற வேண்டுமாம்!

பெண்னென்று பெற்றபின் ஆணொன்று பெறவும், ஆணொன்று பெற்றபின் அடுத்தொன்று பெறவும், அடுத்தொன்று பெற்றபின் அடிக்கடி பெறவும், ஆசைப் படுவதும் அவசரப் படுவதும், ஒப்ப முடியாத தப்பித மாகும்.

ஆசைக்கோர் பெண்ணும் ஆஸ்திக்கோர் பிள்ளையும், இருந்தாக வேண்டும் என்கின்ற எண்ணம் இந்நாட்டில் இன்னும் இருந்து வருவதால், பூத்த குரவம் பூப்போன்ற வடிவில் பெண்ணொன் றிருந்தும் பிள்ளை இல்லையே என்றுசிலர் தினமும் ஏங்கு கின்றனர்

இல்லத்தில் ஆண்மக வில்லா திருப்பினும், எண்ணி மகிழவும் எடுத்துக் கொஞ்சவும், பெண்ணொன் றிருந்தால் பெற்றோர்க்குப் போதுமே!