உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் இலக்கியத்திரட்டு-1.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர்லோவ் தம்பதிகள் 49

மெழுகிடுதல், செருப்புகளின் உட் புறப் பகுதிகளைப் பொருத்துதல், புதிய குதி கால் பகுதிகளுக்கு ஆணி அடித் தல் போன்றவற்றை - மேட்ரோனுவிடம் ஒப்படைத்து விடுவான்.

மத்தியானச் சாப்பாட்டுக்கு என்ன என்ன செய்ய லாம் என்பது பற்றியும் அவர்கள் காலே ஆகாரத்தின் போதே விவாதித்து முடிவு கட்டி விடுவார்கள். குளிர் காலத்தில்-அவர்கள் நிறையச் சாப்பிடும் பருவம் அதுஇந்த விஷயம் சுவையான விவாதத்துக்கு வகை செய்யும். கோடை காலத்தில் அவர்கள் சிக்கனத் திட்டத்தை அனுஷ்டிப்பார்கள். ஞாயிற்றுக் கிழமை தோறும் தான்் அடுப்பு பற்ற வைப்பார்கள். ஒரு சில ஞாயிறுகளில் அடுப்பு புகையாமல் இருந்து விடுவதும் உண்டு. ஆகவே, அவர்களுடைய முக்கிய உணவு குளிர்ந்த சூப்பு தான்். வெங்காயத்தையும் கருவாட்டுத் துண்டுகளையும் அதில் கலந்து கொள்வார்கள். சில சமயங்களில், பக்கத்து வீட் டாரின் அடுப்புகளில் சமைத்து எடுத்த மாமிசத்தையும் சேர்த்துக் கொள்வது உண்டு. காலைச் சாப்பாடு முடிந்த தும், அவர்கள் இருவரும் வேலை செய்ய உட்காருவார்கள். ஒரு பக்கம் கீறல் விழுந்த ஊறுகாய் தொட்டி ஒன்றைக் குப்புறப் போட்டு அதன் மீது கிரிகரி உட்கார்ந்து கொள் வான். அவனுக்கு அருகில் தணிந்த ஸ்டுல் ஒன்றில் அவன் மனேவி இருப்பாள்.

முதலில் அவர்கள் மெளனமாக வேலை செய்வார்கள். பேசுவதற்குத்தான்் விஷயம் ஏது? வேலே சம்பந்தமாக ஒரு சில வார்த்தைகள் பரிமாறிக் கொள்ளலாம். ஆனல், மறு படியும் பேசாமல் வேலே செய்வார்கள். இந்த மெளனம் அரை மணி நேரமோ, அல்லது அதற்கும் அதிகமாகவோ நீடித்திருக்கும். டப்-டப் என்று சுத்தி ஒலி செய்யும். தோலினூடாகப் புகுந்து இழுபடும் நூல் விஷ் - விஷ்'