பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r டாக்டர் எஸ்.எம். கமால் <(2> יר திருக்கோவிலுக்கு வள்ளல் அவர்களால் வழங்கப்பட்டது என்றும் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்த மரகதக்கல்லிருந்து அழகிய சிவலிங்கம் ஒன்று அமைக்கப்பட்டு திருக் கோவிலி ன் வழி பாட்டில் வைக்கப்பட்டதாகவும் நம்பப்படுகிறது. இந்த மரகதலிங்கம் ஆண்டுதோறும் மார்கழி திங்கள் ஆருத்ரா நாளன்று மட்டும் மக்களது தரிசனத்திற்காக வைக்கப்படுகிறது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்தச் செய்திக்கு ஆதாரமாக அமையக்கூடிய ஆவணம் எதுவும் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் இல்லை என்பதும் இராமநாதபுரமர் சமஸ்தான மேனுவலிலும் திருஉத்திரகோசமங்கை தலபுராணத்திலும் எவ்விதக் குறிப்பும் இல்லை என்பதும் இங்கு குறிப்பிடப்படுகிறது.