பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7.பொருண்மொழி

யான் சிறிது நாட்களுக்குமுன் ஒரு ஆங்கில நூலைப் படித்து வருங்கால், இத்தலைப்பொருள்பற்றிய சொற்பொழி வொன்று அதன்கண் இருக்கக் கண்டேன். அதனையான் நுணுகிப் படித்து வருங்காலத்தில், சில நுண்பொருள்கள் அமைந் திருப்பதையுணர்ந்து அதன் உட்பொருளைத் தமிழில் எழுதின் பலர்க்கும் பயன்படுமென்றெண்ணினேனாகலின், இதுபோது எழுதுவேனாயினேன்.

பொருண்மொழி யென்பது பழமொழியைப் போல் நுண் பொருளை யகத்தே கொண்ட உயர்ந்தோர் கூறும் நன்மொழியாகும். இது நம் தமிழ் நூல்களில் “பொருளுரை" யென்றும் “பொருண்மொழிக் காஞ்சி" யென்றும் வழங்கப் பெறுகின்றது. *[1]"பொய்யில் புலவன் பொருளுரை யென்று சீத்தலைச் சாத்தனாராலும், 'மூதுரை பொருந்திய"என்ற சூத்திரத்துள்"பொருண்மொழிக்காஞ்சி" யென்று ஐயனாரிதனாராலும் கூறப்படுதல் காண்க. பொருண்மொழிக் காஞ்சியாவது, "எரிந்திலங்கு சடைமுடி முனிவர், புரிந்து கண்ட பொருண்மொழிந்தன்று"[2](பு-வெ-மாலை 271) என்பர். பொருண்மொழி யென்றதொடர் பொருளை மொழிதல் எனவிரியும் வேற்றுமைத் தொகையாகும். மொழி, முதனிலைத் தொழிற்பெயர். பொருளாவது முனிவர்கள் விரும்பிக் கண்டுதெளிந்த உண்மையென்பதாகும். ~.

இதன்கண் முனிவராவார் 'சடைமுடியுடையராய் உயர்ந்த வொழுக்கமும்' உலகினையும் அதற்கு முழுமுதலாகிய


  1. மணி.22-6/
  2. பு.வெ.மாலை'சூ.12.