பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சித்தாந்த கலாநிதி உரைவேந்தர் ஒளவை துரைசாமி

273


நூல்களும், அரசியல் நூல்களும் நல்லிடம் பெற்றுத் திகழ்ந்தன.

7. பல தெய்வக் கொள்கையும் வழிபாடும் கூறும் சமய நெறிகட்கிடையே ஒரு தெய்வக் கொள்கையும் வழிபாடும் அறிஞர் மனத்துள் வேரூன்றி விளங்கின. அதனால், சில சமயங்கள் சீரிய திருத்தம் அடைந்தன.

8. போர்முறையிலும், நாகரிக வளர்ச்சியிலும் பல்வகை நலங்கள் இவர்களால் நம் நாடு பெற்றுச் சிறப்படைந்தது.

9. இந்துசாரசன் கைத்திறங்களும், சிற்பத் திறங்களும் பெருமக்களின் ஆதரவு பெற்றன. பொன்னும் மணியும் செறிந்த நுண்மாண்கைவினைகள், இவர்கள் காலத்திற் பெற்றது போல் பிற எக்காலத்தும் மேம்பாடு பெறவில்லையெனின், அஃது இறப்பப் புகழும் புகழ்ச்சியாகாது.

10. பட்டினும் பருத்தியினும் ஆய உடைவகைகள் நெய்தலும், கம்பல நெசவும் பிறவும் இந்த இஸ்லாம் சமயத்தவர் நம் இந்திய நாட்டில் செய்த இனிய தொண்டினால் மேன்மையடைந்தன.

இக்கூறிய நலங்கள் அனைத்திற்கும் உரியராய் விளங்கும் இப்பெருமக்களின் நற்புகழ் இந்நிலவுலகில் என்றும் நின்று நிலவுக என வாழ்த்தி இக்கட்டுரையை இவ்வளவில் நிறுத்துகின்றோம்.