பக்கம்:செயலும் செயல்திறனும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

62

செயலும் செயல் திறனும்



கொண்டு, அதைச் சுவரில் அல்லது மரப்பலகையில் அடிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ பேர்கள் உளர். சுவரில் ஆணியை அடிக்கப் புகுமுன் (1). அந்த ஆணி வளையாமல் நேராக துருப்பிடிக்காததாக உள்ளதா என்று கவனிக்க வேண்டும். (2). அதன் கொண்டை சரியானபடி தட்டையாக அமைந்துள்ளதா (3). அதன் முனை மழுங்காமல் கூராக உள்ளதா என்று பார்த்தல் வேண்டும் (4). பிறகு அந்த ஆணி நாம் அதில் மாட்டவிருக்கும் படத்தின் கனத்தைத் தாங்கும் அளவு கனமும் வலிவும் உள்ளதா என்று கணித்தல் வேண்டும். (5). அதன்பின் அந்த ஆணி அடிக்கும் அளவு சுவர் மென்மையாக உள்ளதா என்பதை ஆய்தல் வேண்டும். (6), அந்தப் படம் மாட்ட வேண்டிய இடம் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவ்விடம் அந்த ஆணி அறையும் அளவிற்கு மென்மையாக உள்ளதா, கல்லோ காறையோ உள்ள பகுதியா என்று நோக்க வேண்டும் (7), பின்னர் ஆணியை அடித்திறக்க நம் கையிலுள்ள சுத்தியல் போதுமான கனமுள்ளதாக உள்ளதா என்றும் (8), அதன் அடிப்பகுதி மொழுக்கையாக இல்லாமல் ஆணியின் கொண்டை மேல் அடிக்கப்படும் வகையில் தட்டையாக உள்ளதா என்றும் கவனித்தல் வேண்டும். (9). சுத்தியலின் பிடி நாம் ஆணியை ஓங்கி அறையும் பொழுது சுழன்று வராதபடி அதன் பூணுடன் நன்றாக இணைந்து இறுகியுள்ளதா என்று பார்த்தல் வேண்டும். (10), நாம் அடிக்கப் போகும் ஆணியை நாம் நின்றுகொண்டே அடிக்கும் அளவு உயரம் எட்டுமா, இல்லையானால் உயரமான வலிவுள்ள முக்காலியோ மொட்டானோ போட்டு அதன் மேல் நின்று அடிக்க வேண்டுமா என்றெல்லாம் பார்த்தல் வேண்டும். (11). இனி, நாம் அடிக்கவிருக்கும் படம், அதன் கொக்கியின் வலிவு (12) அது சுவரில் இருக்க வேண்டிய இடம் அமைப்பு அழகு இவற்றைத் தேர்ந்து கொள்ளுதல் வேண்டும். இறுதியில் அந்த ஆணியை நேராக வைத்து இடக்கையால் பிடித்துக் கொண்டு வலக்கையில் உள்ள சுத்தியலால் முதலில் மெதுவாகத் தட்டி ஆணியின் முனையை மெதுவாக, சுவரின் சுண்ணாம்புக் காறையின் உட்புகுந்து நிற்குமாறு இறக்கி, அதன்மேல் பிறகு சிறிது சிறிதாக வலுவேற்றி, ஆணியின் கொண்டையின் மேல் அடித்து அடித்து, ஆணியை இறக்க வேண்டும். இடையில் வளைந்தால் அதைச் சுத்தியால் தட்டிச் சரி செய்துகொண்டு மேலும் அடி சமநிலையாக விழுமாறு அடித்து இறக்குதல் வேண்டும். ஆணி இறங்கிய பின்னும், அதை எந்த அளவில் வெளியே நீட்டிக் கொண்டு இருக்கும்படி நிறுத்த வேண்டுமோ அந்த அளவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி, சுவரில் ஓர் ஆணியை அறைவதற்கே இவ்வளவு கவனம் செயலளவில் நமக்குத் தேவையானால், ஒரு நாற்காலி செய்ய, ஒரு விசி