பக்கம்:செவ்வானம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்ணன் 81 முக்கியம் பெற்றாக வேண்டும், தயவு கிடைக்காவிட்டாலும் வீண் வெறுப்பையும் விரோதத்தையும் சம்பாதிக்காமலிருப்பதே நல்லது என நினைத்த பெரிய அம்மாள் தலையிட்டுச் சமாதானம் செய்தாள் தெரியாத்தனம். இதை உங்களை மாதிரி பெரிய மனுஷங்க பொருட்படுத்தலாமா?' என்று குழைந்தாள் அவள். அவள் நன்றாகப் புரிந்து கொண்டு விட்டாள், சிவசைலம் ஆட்டிவைக்கிறபடிதான் முதலாளி நடப்பார் என்று. 'அதனாலே ஒண்ணுமில்லே. தம்பி இப்ப என் முன்னாலே பேசின மாதிரி வேறு எங்கேயும் யோசிக்காமலே பேசிவிடப்படாது பாருங்க. அதுக்காகத்தான் எச்சரித்து வைத்தேன். அது சரி. இப்போ உங்க விலாசத்தைக் கொடுத்துவிட்டுப்போங்க ஏற்பாடுகள் எல்லாம் பூரணமானதும் அறிவிக்கிறோம் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார். போகும் பொழுது சாவித்திரியும் சியாமளாவும் நெளிந்து வளைந்து ஸ்டைலாக நின்று ஒயிலாகக் கரம் குவித்து வணக்கம் செலுத்தினர். வாழ்க்கையில் நன்றாக நடிக்கத் தெரிந்த கைகாரிகள் அவர்கள் என்பது அவர்களது ஒவ்வொரு அசைவிலும் பார்வை யிலும் சிரிப்பிலும் பேச்சிலும் நன்கு பிரதிபலித்தது. அவர்கள் போனபிறகு சாவித்திரி பரவால்லே. ஒப்பந்தம் பண்ணிப் போட்டிருந்தால் ஏதாவது சிறு வேஷத்திற்குப் பயன் படாமலா போகப்போறா' என்று தன் கருத்தை அறிவித்தார் சிவசைலம் "ஆமாமா என்ற முதலாளி இன்னொருத்தி. அவபேரு என்ன, சியாமளாவா? - அவ கூடப் பரவால்லே. அடக்க ஒடுக்கமா இருக்கிறா. அழகாகக் கூட இருக்கிறா. அவளையும் சேர்த்துக் கொள்ளலாம் என்று சொன்னார். ஆகா தாராளமாக முதலாளியின் கிருபை பிறந்து விட்டதென்றால் அவளுக்கு அதிர்ஷ்டம் தான். தடை செய்வதற்கு நான் யார்?' என்று கிண்டலாகச் சொல்லிக் கனைத்தார் அன்பர். செ. - 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/83&oldid=841451" இலிருந்து மீள்விக்கப்பட்டது