பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 காப்புப் பருவம் சேக்கிழார் வாழ்க்கையிலும், வாக்கிலும் தெரிய வருகின்றது என்பதற்காகும். அநபாய சோழன் பேர் அரசன். அவன் சீவகசிந்தாமணி என்னும் நூலில் ஈடுபட்டவன். அத்தகையவனுக்குச் சிவனடியார் வரலாற்றைச் சொல்லி, அவ்ன் மனத்தைத் திருப்பலாமோ திருப்பக்கூடாதோ என்று சிறிதும் தயங்காது தமது உளக்கருத்தை உரைத்த உரம் பெற்றவர் சேக்கிழார் ஆதலின், ஆளி' என்று ஈண்டுக் குறிப்பிடப் பட்டார். இலைமலி எனும் கவி, இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க் கடியேன் ஏன தி நாதன்தன் அடியார்க்கும் அடியேன் கலைமலிந்த சீர் நம்பி கண்ணப்பர்க் கடியேன் கடவூரில் கலயன் தன் அடியார்க்கும் அடியேன் மலைமலிந்த தோள்வள்ளல் மானக்கஞ் ஞாறன் எஞ்சாத வாள்தாயன் அடியார்க்கும் அடியேன் அலைமலிந்த புனல்மங்கை ஆளுயர்க் கடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக் காளே” என்பது. எழுபுவனங்கள் பூலோகம், புவர்லோகம், சுவர்லோ கம், சன லோகம், தபோலோகம், மகாலோகம், சத்திய லோகம். இவை மேல் ஏழு லோகங்கள். கீழ் ஏழு லோகங்கள் அதலம், விதலம், சுதலம், தராதலம், மகாதலம், இரசா தலம், பாதாலம் என்பன. ஏழு முனிவர்கள் மரீசீ, அங்கிர சன், புலகன், வசிட்டன், அத்திரி, புலஸ்தியன், கிருது ஆவார். ஒரு சிலர், கசியபன், அத்திரி, பரத்துவாசன், விசுவாமித் திரன், கெளதமன், ஜமதக்கினி, வசிட்டன் என்பர். அமர் வார் என்பது விரும்புவார் என்னும் பொருள் தருதலை, அகன்அமர்ந்து செய்யாள் உறையும் முகன்அமர்ந்து நல்விருந்து ஒம்புவான் இல்’! என்ற குறட்பாவில் காண்க,