பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காப்புப் பருவம் எனப்பட்டனர். இவர்களது வரலாற்றுக் குறிப்பை உற்று நோக்கினல் இவர்களது வன்மை நன்டு புலப்படுதல் காணலாம். அதனல்தான், 'விறல் எழுவர்' எனச் சிறப் பிக்கப்பட்டனர். சிவனடியார்களை வாயார வாழ்த்தல் சைவர் மரபு. ஈண்டு வாழ்த்தல் துதித்தல். அடியார் திருவடிக் கமலங்களே முடிமீது சூட்டலும் சைவ முறை யாகும். இதனைச் சேக்கிழாரே, காழியர் தவமே கவுணியர் தனமே கலைஞானத் தாழிய கடலே அதனிடை அமுதே அடியார்முன் வாழிய வந்திம் மண்மிசை வானேர் தனிநாதன் ஏழிசை மொழியான் தன்திரு அருள் பெற் றனஎன்பார் என்றினைய பல கூறி இருக்கும் மொழி அந்தணரும் ஏனே யோரும் நின்று துதி செய்து அவர்தாள் நீள் முடிக்கண் மேல் ஏந்தி” என்று பாடிக் காட்டி இருத்தல் காண்க. அப்பூதி அடிகளார், அப்பர் பெருமான் திருவடிகளேத் தம் முடிமேல் சூட்டிக் கொண்டதையும் சேக்கிழார், அரசறிய உரைசெய்ய அப்பூதி அடிகள்தாம் கரகமலம் மிசைகுவியக் கண் அருவி பொழிந்திழிய உரைகுழறி உடம்பெலாம் உரோமபுள கம்பொலியத் தரையின்மிசை வீழ்ந்த்வர்தம் சரணகம லம்பூண்டார் என்பதை ஈண்டு நினைவு கொள்வோமாக. இவ்வ்ெழுவர் திருவடிகளைச் சேக்கிழார் துதித்துப் போற்றினமையினே எரிபத்தர் அடிகள் சூடி,” என்றும் 'ஏளுதிநாதர் கழல் இறைஞ்சி” என்றும், 'தங்களுல் மாற் றப் பெற்ற தலைவர்தாள் தலைமேல் கொண்டு” என்றும், 'கலயனுரைப் பணிந்து' என்றும், 'ஒரு மகள் கூந்தல் தன்னை வதுவை நாள் ஒருவர்க்கீந்த பெருமையார் தம்மைப் போற் றும் பெருமை” என்றும், வடுவின் ஒசை அந்நிலை கேட்ட தொண்டர் அடியினே தொழுது வாழ்த்தி' என்றும் கூறியுள் ளமை கொண்டு அறியலாம். -