பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 காப்புப் பருவம் தழைத்ததோர் ஆத்தி யின்கீழ்த் தா.பரம் மணலால் கூப்பி அழைத்தங்கே ஆவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு பிழைத்ததன் தாதை தாளைப் பெருங்கொடு மழுவால் வீசக் குழைத்ததோர் அமுதம் ஈந்தார் குறுக்கைவி ரட்ட ளுரே என்றும், நிறைந்தமா மணலைக் கூப்பி நேசமோ டாவின் பாலைக் கறந்துகொண் டாட்டக் கண்டு கறுத்ததன் தாதை தாளை எறிந்தமா னிக்கப் போதே எழில்கொள்சண் டீசன் என்னச் சிறந்தபேர் அளித்தார் சேறைச் செந்நெறிச் செல்வ ளுரே என்றும்பாடி, அவர் ஆந்திமர நீழலில் மணலால் இலிங்கம் அமைத்து, ஆவின் பால் முழுக்குச் செய்து, மலர் இட்டு, வழி பட்ட நிலையில் தம் பூசைக்கு இடையூறு செய்த தம் தந்தை யார் தாளை மழுவால் வெட்ட இறைவர் அவர்க்குக் கொன்றை மாலை சூட்டிச் சண்டீசர் என்னும் சிறப்பையும் தந்தார் என்ற வரலாற்றை அறிவித்தனர். அப்பூதி அடிகளாச் நாட்டில் வறுமை ஒழிய யாகம் செய்தவர், இறை வர் திருவடியில் தம் தலைபொருந்த வணங்குபவர் என்பனவற்றை, 'அஞ்சிப்போய்க் கலிமெலிய அழல் ஒம்பும் அப்பூதி குஞ்சிப் பூவாய்நின்ற சேவடியாய்” என்று பாடி யுள்ளார். நமிதந்தி அடிகள் லேப் பற்றிக் குறிப்பிடும்போது,