காப்புப் பருவம் 179 அடியேன் பெற்ற மக்கள்.இவர் அடிமை யாகக் கொண்டருளிக் கடிசேர் மலர்த்தாள் தொழுதுய்யக் கருணை அளிக்க வேண்டும்எனத் தொடிசேர் தளிர்க்கை இவர் எனக்குத் தூய மக்கள் எனக்கொண்டப் படியே மகண்மை யாக்கொண்டார் பரவை யார்தம் கொழுநனர் என்று பாடி அறிவித்துள்ளனர். மேலும், சுந்தரர் அவர்களே மகவாய் ஏற்றுக்கொண்டு இன்புற்றதையும் அருண்மொழித் தேவர், கோதை சூழ்ந்த குழலாரைக் குறங்கின் வைத்துக் கொண்டிருந்து காதல் நிறைந்த புதல்வியராம் கருத்துள் கசிவாம் அனைத்துச்சி மீது கண்ணிர் விழமோந்து வேண்டு வனவும் கொடுத்தருளி நாதர் கோயில் சென்றடைத்தார் நம்பி தம்பி ரான்தோழர் என்று பாடி யருளினர். இவை சேக்கிழார் கூற்றுக்களே ஆயினும், சுந்தரரே தம் திருவாக்கால் தம்மை, "சிங்கடி அப்பன்' வனப்பதை அப்பன்' என்று பாடியும் அறிவித்துக் கொண்டனர். இதன முறையே திருநாட்டியத்தான்குடிப் பதிகத்தில், சேடார் பூங்குழல் சிங்கடி அப்பன்' என்றும், திருநாட்டுத் தொகைப் பதிகத்தில், வனப்பகை அப்பன் வன்ருெண்டன்’ என்றும் பாடியிருத்தலேக் காணவும். இன்னோரன்ன காரணங்களால் தாம் இருவரை மணந்த தற்கு ஏற்ப இரு பெண் பிள்ளைகளைப் பெற்றெடுத்த தந்தையர் ஆயினும், இவ்விரு பெண்களும் பரவையார்க்கும், சங்கிவியார்க்கும் பிற வாதவர்கள் ஆதலால், திரு இது,
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/261
Appearance