பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 187 என்றனர் அப்பர் பெருமானுர். மேலும் அவரே, 'ஆர் ஒருவர் உள்குவார் உள்ளத்துள்ளே அவ்வுருவாய் நிற்கின்ற அருளும் தோன்றும்” என்றும் கூறியுள்ளனர். உரைசேரும் எண்பத்து நான்கு நூ ருயிரமாம் யோனி பேதம் நிரைசேரப் படைத்தவற்றின் உயிர்க்குயிராய் நின்ருன் என்றனர் திருஞானசம்பந்தர். அருண் நந்தி சிவாசாரியார், யாதொரு தெய்வங் கொண்டீர் அத்தெய்வம் ஆகி ஆங்கே மாதொரு பாகளுர் தாம்வருவர் என்றனர், இன்னேரன்ன எடுத்துக் காட்டுக்களால் சிவபெருமானே அவ்வச் சமயக் கடவுளராக இருந்து அருள் புரிதலின், அவ்வச் சமயத்தவர்களும் இறையடியில் அன்புடையராய் அவனைச் சார்ந்தவர்கட்கும் தாம் அடிமையாள் என்ற குறிக்கோளு டன் தான் நம்பி ஆரூரர் குறித்தனர் என்ற குறிக்கோளே நன்கு உணர்ந்து கூறிய சேக்கிழார் பெருமான் தம் நுண்ண றிவுத் திறனே என்னென்று வியப்பது! இதஞல் சைவ சமயத்தின் ஏற்றத்தை உணர்த்திய அறிவுத் திறனேயும் நாம் வியக்காமல் இருக்க முடியாது. இறைவனம் சைவ சமயத்திற்கும் குறுகிய ஒரு நாட்டிற்கும் மட்டும் உரியவர் அல்லர். சிவபெருமான் உலக முழுமைக்கும் உரியவர் என்ற கருத்தினுல்தான் சேக்கிழார்தம் நூலின் ஈற்றில், மன்று ளார்.அடி யார்.அவர் வான்புகழ் நின்ற தெங்கும் நிலவி உலகெலாம் என்று முடித்துக் காட்டினர். ஈண்டு, திரு பிள்ளே அவர்களின் கவிச் சிறப்பையும் அறிதல் வேண்டும். இதுவரையில் தனி அடியார்கனேச் சுட்டிப் பாடிய பாடல்களில் ஒரு சொல்லால் மட்டும் அவர்களின் திருவடிகளை வணங்குவாம் என்று பாடியுள்ளனர். ஈண்டுத் தொகை அடியார்களைக் கூறுகிருர். ஆதலின், அவர்கள் பற் பலர் என்றதஞல், ஒரு சொல்லால் வணக்கத்தை அறிவிக்