பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செங்கீரைப் பருவம் 229 அருந்தவருக்கு ஆலின்கீழ் அறம்முதலா நான்கினையும் இருந்தவருக்கு அருளுமது எனக்கறிய இயம்பேடி அரும்தவருக்கு அறம் முதல்நான்கு அன்றருளிச் செய்தில னேல் இருந்தவருக்கு உலகியற்கை தெரியாகாண் சாழலோ என்ற திருட்பாடலைக் காண்க. தேவாரத்திலும் இவ்வாறு இந்நான்மறைப்பொருளைச் சனகாதியர்கட்கு உபதேசம் செய்ததை முதல் திருமுறை திருமுதுகுன்ற பதிகத்தில், 'அந்தணுளர்க்கு அறம்பொருள் இன்ப வீடு மொழிந்தவாயான் முக்களுதிமேய முதுகுன்றே" என்றும், 'அறங்கிளரும் நால்வேதம் ஆலின்கீழ் இருந் தருளி' என்றும் குறிப்பிட்டதையும் காண்க. இத்துடன் தமிழில் மறை உண்டு என்பதைத் தேவாரம், மறை இலங்கு தமிழ்' என்றும் 'மறை வளரும் தமிழ் மாலை” என்றும் குறிப்பிட்டுப் பாடியதையும் காண்க. இன்னுேரன்ன குறிப்புக்களினல் தமிழில் மறை உண் டென உணர் க. அந்தோ! இறைவர் சனகாதியர்கட்கு அருளிய மறைகள் மறைந்து போயின. என்ருலும், அந்நான் மறைகளின் உட்பொருளைத் தன்னகத்தே கொண்டு விளங்குவன நம் சைவத் திருமுறைகளும், திருக்குறளுமே ஆகும். இந்த உண்மையினை, தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திலமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். என்று ஒளவை மூதாட்டியார் அறிந்து கூறிய அமுதவாக் கால் நன்கு உணரலாம். இந்தத் திருமுறைகளாம் தமிழ் மறையில் அமைந்த பல இரகசியங்களைச் சேக்கிழார் பெருமாளுர், வெளிப்பட எடுத்து மொழிந்துள்ளார். இதற்கு உதாரணம் வேண்டுவார் ஞான சம்பந்தர் பாடிய