பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

822 தாலப் பருவம் பந்தலில் தம் பெயர் பொறித்திருப்பதைக் கண்டதும் வியப் புற்று, தம் பெயரை எழுதியவர் யாவர்? அவரை யாம் காண வேண்டும் அன்ருே? என்ற கருத்தில் அப் பந்தரிடை இருந்தவரை நோக்கி, 'இப்பந்தர் இப் பெயரிட்டு இங் கமைத்தார் யார்?' என்று கேட்டனர். இவ்வாறு கேட்ட அப்பர் பெருமாளுர்க்கு ஆண்டிருந்தோர் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் முறையில், துன்றிய நூல் மார்பரும்இத் தொல்பதியார் மனையின்கண் சென்றனர்.இப் பொழுதுஅதுவும் சேய்த்தன்று நளிைத்தென்ருர் என்றனர். இவ்விரண்டடிகளில் பந்தல் அமைத்தவர் அந்தணர் என்பதையும், அவ்வந்தனர். இவ்வூர்வாசி என்பதைவும், அவர் வீடு வாசலுடன் இல்லறத்தை நடத்துபவர் என் பதையும், அவர் இப்பொழுதுதான் தம் இல்லம் சென்ற தால், உடனே சென்ருல் அவரைக் காணலாம் என்பதையும், அவர் விடும் தூரத்தில் இல்லே அருகில்தான் உள்ளது என்பதையும் எத்துணே அழகுற சுருக்கமும் விளக்கமும் அமைய அறிவித்து நிற்கின்றனர். பாருங்கள்! மாதொரு பாகனர்க்கு வழிவழி அடிமை செய்யும் வேதியர் குலத்தில் தோன்றி மேம்படு சடைய னருக்கு ஏதமில் கற்பின் வாழ்க்கை மனே இசை ஞானியார்பால் தி.தகன் லுலகம் உய்யத் திருஅவ தாரம் செய்தார் என்னும் இப்பாட்டில் சுந்தரர் அந்தணர் மரபினர் என்பதையும், அவரது பெற்ருேர் இன்னர் என்பதையும் எவ்வளவு அழகுற விளங்க வைத்துள்ளார் என்பதைக் காண்க. கொத்தார்மலர்க் குழலாள் ஒரு கூருய்அடி யவர்.பால் மெய்த்தாயினும் இனியான அவ் வியன் நாவலர் பெருமான்