தாலப் பருவம் 33 f. அளிக்குலங்கள் சுளித்தகல அரவிந்தம் முகம்புலரப் பளிக்குமணி மரகதவல் லியில்கோத்த பான்மைஎனத் துளித்தலைமெல் அறுகுபனி தொடுத்தசையச் சூழ்பனியால் குளிர்க்குடைந்து வெண்படாம் போர்த்தனைய குன்றுகளும் எய்து மென்படை யோடிரை தேர்ந்துண்டு பொய்கை யில்பகல் போக்கிய புள்ளினம் வைகு சேக்கைகண் மேற்செல வந்தது பையுள் மாலே தமியோர் பனிப்புற பஞ்சின் மெல்லடிப் பாவையர் உள்ளமும் வஞ்ச மாக்கடம் வல்வினை யும்அரன் அஞ்செ முத்தும் உணரா அறிவிலோர் நெஞ்சு மென்ன இருண்டது நீண்டவான் போத ஞானப் புகலிப் புனிதரைச் சீத முத்தின் சிவிகைமேல் ஏற்றிடக் காதல் செய்பவன் போலக் கருங்கடல் மீது தேரின்வந் தெய்தினன் வெய்யவள் என்பனபோன்ற கவிகள் பெரும்பொழுது, சிறுபொழுது கட்கு ஏற்ற கவிகள். புணர்ச்சி: பண்டுநிகழ் பான்மையினல் பசுபதிதன் அருளாலே வண்டமர்பூங் குழலாரை மணம்புணர்ந்த வன்தொண்டர் புனடரிகத் தவள்வனப்பைப் புறங்கண்ட தாநலத்தைக் கண்டுகேட்டு உண்டு உயிர்த்து ற் றமர்ந்திருந்தார் காதலினுல் என்று சுந்தரர் சங்கலியாரைப் புணர்ந்து இன்புற்ற நிலை யி னேயும்,
பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/413
Appearance