பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மண்டல வேலைப் புவிவில் பத்திசெய் மார்க்கம் அறிந்தவர்.ஆர் வண்சுவை அமுத ஒழுக்கென வார்த்தை வழங்கத் தெரிகுநர் ஆர் கொண்டலை நேர்பக டுர்கரு கூற்றம் குதித்துய்ந் திடவலர்யார் கொற்றக் கைலைக் கனநா தர்களொடு கூடுடி மகிழ்பவர்.ஆர் விண்டலை யாரும் பெறல் அரும் இன்பம் விராவும் திறலினர்.ஆர் விமலா நீ அவ தாரம் செய்யா விடின் என மேயவயைந் தண்டலை சூழும் குன்றைத் திருமுனி தாலோ தாலேலோ சைவப் பயிர்தழை யத்தழை யும்புயல் தாலோ தாலேலோ (அ. சொ :) மண்டு - மிகுந்த, நெருங்கிய, தொடர்ந்து வருகின்ற வேலை - கடல், மார்க்கம் - வழி, வண்கலை - வளமான சுவை, கொண்டல் - மேகம், நேர் - ஒத்த, பகடு - எருமைக்கடா, ஊர்தரு-ஏறி நடத்தும், கூற்றம் இயமன், குதித்து - வென்று, கடந்து, தப்பி உய்ந்திட - பிழைத்திடவலர் - வல்லவர், கொற்றம் - வெற்றியுடைய, கூடுயு சேர்ந்து, விண்தலையார் - தேவலோகத்தில் உள்ளவர்களும் பெறல் அரும் - பெறுதற்கரிய, விராவும் சேரும், திறலினர்' வன்மையுடையவர், விமலா - குற்றமற்ற சேக்கிழார் பெரு மானே, மேயவ - பொருந்தியவரே, பைந்தண்டலை - பசுமை யான சோலை. விளக்கம் : உலகம் கடலால் சூழப்பட்டுள்ளது என் பதைக் கவிஞர் கூறல் மரபு. 'வாராரும் கடல் புடைசூழ் வையம்” என் புர் உமாபதி சிவம். "நீராரும் கடல் உடுத்த