பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/452

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370 சப்பாணிப் பருவம் என்றும் கூறப்பட்டதஞல், சூரியனைக் கண்ட தாமரை போல் அன்பர்கள் மனம் மலர்ந்து தம் மகிழ்வைக் காட்டியதை அறிகிருேம். சந்திரனைக் கண்டபோது, தாமரை குவியும். அது போலச் சேக்கிழாராம் சந்திரனேக் கண்டபோது தாமரை போன்ற கைகளைக் குவித்து வணங்கியதையும் அப் புரா ணத்துள் காண்கிருேம். கண்ட போதுள மகிழ்ந்து தன்னைஅறி யாது கைகள்தலே மீதுறக் கொண்ட வேடம்அான் அடியர் வேடம்.இது குறைவி லாததவ வேடம்என் றண்ட வாணர்திரு அருளை உன்னி அவர் அடிமை கொண்டபெரு மையை நினைந்து எண்த யங்கு அரசர் ஏறு சேவையர் குலாதி பாதுகை இறைஞ்சினன் என அரசர் கைகுவித்து வணங்கியதையும், மெய்யுள சிவசா தனுமும் வெளிப்பட வ்ெண்ணி றெழுதிய கண்ணேறும் கையும் திகழ்மணி கண்டமும் ஒளிதரு கவளிகை யும்புத் தகஏடும் நையும் திருவுளம் அழியும் தொறும்அர கரஎனும் நாமமும் நாமெல்லாம் உய்யும் படிஅருள் கருணையும் அழகிதெ னத்தொழு தனர்.உல கவர்எல்லாம் என்று மக்கள் கைகுவித்துத் தொழுததையும் பார்க் ஒன்ருேம். இக் காரணங்களால்தாம் திரு பிள்ளை அவர்கள் சேக்கிழாரைச் சூரியனுகவும், சந்திரளுகவும் நமக்குக் காட் டினர். ஆன்ருேச் ஈண்டு உமாபதி சிவாசாரியார், சிவஞான முனிவர் முதலானேர். சேக்கிழார் திருக்கரம், திருத்தொண்டர் புராணத்தைஎழு தியதால், 'தாவாத ஒளிகிளர் நின்அங்கைத்தலம்' என்றனர். புகழை மெண்ணிறமாகக் கூறல் புலவர் மரபு ஆதலின், சூரியனை உவமை காட்டினர். இவ்வாறு புகழ் வெண்ணிறம் என்பதைச் சிவஞான முனிவர் காஞ்சிப் புராணத்தில்,