பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/598

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

516 வாரானைப் பருவம் உலகுய்ய ஆண்டு கொள்ளப் பெற்றவர் பாதம் உன்னித் தலைமிசை வைத்து வாழும் தலைமைநம் தலைமை ஆகும் என்ற பாடலில் நன்கு வெளிப்படையாககத் தெரிகிறது. ஆனால், சன்மார்க்கச் செந்நெறியினரான மணிமொழி யாரது மலரடி வணங்குதற்கு நேரடியான வாய்ப்புச் சேக் கிழார்க்கு இன்றேனும், அவரது திருவாசத்தினின்றும் பல அரிய கருத்துக்களேத் தம் நூலில் எடுத்து ஆண்டுகொண்டு அவரது பொன்னர் திருவடிகளைத் தம் உள்ளத்தால் போற்றி வணங்கியவர் என்பது பெரியபுராணச் செய்யுட் களால் நன்கு விளங்குகிறது. அவற்றுள் ஒன்று, ஆங்கவர் மனத்தின் செய்கை அரனடிப் போதுக் காக்கி ஒங்கிய வாக்கின் செய்கை உயர்ந்த அஞ் செழுத்துக் காக்கித் தாங்குகைத் தொழிலின் செய்கை தம்பிரான் அடியார்க் காகப் பாங்குடை உடையும் கீளும் பழுதில்கோ வனமும் நெய்வார் என்பது. இது, சிந்தனை நின் தனக்குஆக்கி நாயி னேன்.தன் கண்ணிணே நின் திருப்பாதம் போதுக் காக்கி வந்தனையும் அம்மலர்க்கே ஆக்கி வாக்குன் மணிவார்த்தைக் காக்கி என்னும் திருவாசக அடிகளே ஒட்டியது அன்ருே? இவ்வாருன நான்குநெறிகளின் பொருள்களைச் சேக் இழார் தமது பெரிய புராணத்தில் விரித்து வைத்து அன் பர்கள் கொள்ளச் செய்த அருமையினக் கண்டு 'திரு. பிள்ளை அவர்கள் 'பொலிய எண்ணும்' என்றனர். ஆடையின் மென்மைக்கு அரவின் தோலை உவமை காட்டினர். இவ்வாறு